Skip to main content

பாஜகவுடன் திமுக ஏன் நேரடியாக மோதவில்லை: சீமான் கேள்வி

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.

 

திரைத்துறையில் இருந்து வந்தவர் நீங்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் பாஜக வேண்டாம் என்கிறார்கள். மேலும் சிலர் இந்த நேரத்தில் பாஜகவும் வேண்டாம், காங்கிரஸூம் வேண்டாம் என்று சொல்வதே இயல்பாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இருக்கிறது என்கிறார்களே?

 

seeman


 

அது சுத்த பைத்தியக்காரத்தனம். காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு மாற்று சொல்லுங்கள். மதவாதத்திற்கு நாங்கதான் எதிர் என்று பேசுகிறது திமுக. முதலில் பாஜகவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த கட்சி அது. ஒன்றுமே இல்லாததை ஒன்றாக்கியது யார்?
 

சில நிபந்தனைகளோடதான் அந்த கூட்டணி அமைந்தது?
 

நிபந்தனை நிபந்தனை என்று பேசக்கூடாது. செஞ்சீங்களா இல்லையா? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடினீர்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் அதனை கொண்டு வரும்போது ஆதரித்தீர்கள். இங்க எதிர்த்துவிட்டு, அங்கு ஆதரித்துள்ளீர்களே என்று கலைஞரிடம் கேட்கும்போது, மதவாத சக்திக்கு எதிராக வந்துவிடும் என்றார். இரண்டு மாதம் கழித்து ஏற்காடு இடைத்தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜகவிடம் ஆதரவு கடிதம் கேட்டார். இது என்ன மதவாத எதிர்ப்பு. 

 

இந்த மண்ணில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது. எத்தனை இடங்களில் திமுக நேரடியாக மோதுகிறது. தூத்துக்குடியில் கனிமொழியை அறிவித்த பிறகு, தமிழிசை அந்த தொகுதியில் நின்றுவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் நிற்கிறார்கள். மற்ற நான்கு இடங்களில் ஏன் உதயசூரியன் சின்னத்தில் நேரடியாக யுத்தம் செய்து நிற்கவில்லை. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செஞ்சீங்கல்ல ஏன் போட்டியிடவில்லை. சிவகங்கையிலும், நாகர்கோவிலிலும் என்ன செய்தீர்கள். கூட்டணிக்கு கொடுத்துவிட்டு விலகிவீட்டீர்கள். மற்ற இரண்டு இடங்களை முஸ்லீம் லீக் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டீர்கள். 
 

ஒரு போர் வீரன் யுத்தத்திற்கு நேரடியாக போக வேண்டும். வேற ஆளை அனுப்பிவிட்டு நான்தான் எதிரின்னு சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்கிறது. ஒன்றுமில்லாதவனை அடிக்க ஏன் ஊரை திரட்டுக்கொண்டு வரணும். வடஇந்தியாவில் அவர்களை வீழ்த்துவதற்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் திட்டம் வைத்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி திட்டம் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். 
 

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது அதில் எந்த கருத்தை முன்வைப்பீர்கள். ஆட்சியின் சாதனையை சொல்லுங்கள். மதவாதம் என்று நீங்கள் பேசாதீர்கள். உங்க ஜெகத்கஸ்பர் எழுதுகிறார் கிருத்துவ மக்கள் எல்லோரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று. இதை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் இங்கு போகிறார்கள். நாம் பாஜகவுக்கு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய மறைமுக வளர்ச்சி. 

 

mkstalin


 

திமுகவிலும் இந்துக்கள் இருக்கிறார்களே?
 

BJPயின் B டீமே திமுகதான். வருபவர்களை நீங்க எப்படி பார்க்கிறீர்கள். மதமாக பார்க்கிறீர்கள். அப்போது நீங்களும் பிஜேபிதானே. 90 விழுக்காடு இந்து என்று ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். வருபவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று பார்க்கிறீர்கள். நீங்க ஏன் ஒரு சீட்டுக்கூட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவில்லை. அப்போது நீங்களும் பிஜேபிதானே. பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது. இதற்கு பிறகு கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டு விழாது என்று அது முடிவு செய்துவிட்டது. அதனால் அதிமுக சீட்டு கொடுக்கவில்லை. நீங்கள் ஏன் சீட் கொடுக்கவில்லை. உங்களுக்கும் பிஜேபிக்கும் வித்தியாசம் என்ன? 



 

கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி இருக்கிறதே?
 

கூட்டணி வைத்ததால் சீட். ஒரு சீட் கொடுத்ததால் நாடு எங்கும் உள்ள ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மண்புழுவை போட்டு மீனை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. மண்புழுவின் எடை என்ன. மீனின் எடை என்ன? இது எந்த மாதிரியான அணுகுமுறை. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.