Skip to main content

'இதே நீதிபதி நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்குவது ஏன்?' - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

'Why is this judge wasting the precious time of the court?'-DMK organization secretary RS Bharathi asked

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''திமுக ஆட்சி மீது ஒரு களங்கத்தை உருவாக்கும் வகையில் நடந்து முடிந்த வழக்குகளை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிக்க இருக்கின்ற காரணத்தினால் அது குறித்து விளக்கம் அளிப்பது திமுகவின் கடமை என்கிற காரணத்தினால் கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையிலும், திமுகவின் சார்பில் 1995 லிருந்து பல வழக்குகளை தொடர்ந்தவன் என்ற முறையில் சில விளக்கங்களை நான் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். திமுகவை பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் உண்டு.

 

நீதிமன்றத்தின் வாயிலாக பல வெற்றிகளை பெற்றிருக்கக் கூடிய ஒரு இயக்கம் தமிழகத்தில் உண்டு என்று சொன்னால் அது திமுக தான். குறிப்பாக ஜெயலலிதாவுடைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எல்லாம் நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபித்து உச்சநீதிமன்றம் வரை நிருபிக்கப்பட்டதெல்லாம் எல்லோரும் அறிந்த ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக கலைஞர் மறைந்த நேரத்தில் அவருக்கு அண்ணா சதுக்கத்திற்கு பக்கத்தில் இடம் தர முடியாது என்று அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி மறுத்த நேரத்தில், இரவோடு இரவாக நீதிமன்றம் கூடி வழக்கை விசாரித்து கலைஞருக்கு அவர் விரும்பிய படியே அண்ணாவின் காலடியில் அவரை அடக்கம் செய்வதற்குரிய உரிமையை நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் நாங்கள் பெற்றோம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக நீதிமன்றத்தின் மீது திமுக நம்பிக்கை வைத்திருக்கும்  நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதாக அறிக்கையில் பார்த்திருக்கிறோம்.

 

உள்ளபடியே திமுகவை பொருத்தமட்டிலும் வழக்குகளை எல்லாம் சந்திப்பதற்கு தயாராக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பது என்னுடைய கடமை. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. உதாரணத்திற்கு சீனிவாசன் என்கின்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு எதிர்ப்பாக தீர்ப்புகளை வழங்கினார் என்பதற்காக அவருடைய வீட்டு குடிநீர் இணைப்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல சத்யதேவ் என்ற நீதியரசர் அரசுக்கு சில எதிர்ப்பான தீர்ப்புகளை வழங்கினார் என்பதற்காக இதே மாதிரி அவருடைய இல்லத்திற்கும் நடந்தது. மற்றொரு நீதிபதியான ஏ.ஆர். லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. அதேபோல் நான் போட்ட டான்சி வழக்கை விசாரித்த சிவப்பா என்ற நீதிபதி ஜெயலலிதாவுடைய மனுவை ஏற்காமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு போட்ட காரணத்தால் 2001-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் எப்படி பந்தாடப்பட்டார், பதவியை ராஜினாமா செய்துவிட்டு போனார் என்பதெல்லாம் வரலாறு.

 

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 2018 ல் திமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி டெண்டரில் 3600 கோடி ரூபாய்க்கு ஊழலும் முறைகேடும் நடைபெற்றது என நான் தொடர்ந்து வழக்கை சென்னையில் அன்றைக்கு விசாரித்த நீதியரசர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டார். உடனடியாக எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கினார். இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு ஆனந்த வெங்கடேஷ் (இதே நீதிபதி) முன்னால் வந்தது. அவர் தந்த தீர்ப்பு உங்களுக்கு எல்லாம் தெரியும். நீதிமன்றத்தினுடைய நேரத்தை வீணாக்க கூடாது என்று சொன்ன அதே நீதிபதி இரண்டு வாரம் கழித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெறும் 44 லட்சம் ரூபாய் டிஷ் ப்ரொபஷனல் கேசில் தாமாக வழக்கை விசாரித்து நீதிமன்றத்தினுடைய பொன்னான நேரத்தை 44 லட்சத்திற்காக செலவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதேபோல் பொன்முடி வழக்கிலே பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது என்றால் தாமாக மாற்றிக் கொள்ளவில்லை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதற்குரிய உத்தரவு போட்டார்கள். அதையெல்லாம் கேலி செய்கின்ற வகையில் கிண்டல் செய்கின்ற வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. விசாரணை நடத்தி விடுவிக்கப்பட்டவர்களை தாமாக எதிர்த்து விசாரிக்க வேண்டும் என் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் சொல்லியிருக்கிறார்.

 

நாங்கள் நிச்சயமாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். அது மட்டுமல்ல ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்ட அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ அதே முகாந்திரத்தின் அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இன்றைக்கும் ஓபிஎஸ் எம்எல்ஏவாகத்தான் இருக்கிறார். நத்தம் விஸ்வநாதனும் எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏக்களின் வழக்கை விசாரிக்க அதிகாரம் கொண்டது நீதிமன்றம். ஆனால் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது என்று சொன்னால் நிச்சயமாக  நீதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. தாமாக முன் வந்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் இருக்கிறது. ஆனால் அது பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கக் கூடாது'' என்றார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்