Skip to main content

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது ஏன்?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

தினகரன் ஆதரவு. எம்.எல்.ஏ.க்கள் மூணு பேரின் பதவி பறிப்பு சம்பந்தமா சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லைன்னு தி.முக.. மனு கொடுக்க, தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னாடியே தமிழக அரசியல் மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. இதற்கு "மே 23-ந் தேதி, 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் தெரிகிற வரைக்கும் ஆளுந் தரப்புக்கு பதட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க பார்க்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ.க்கள் தவிர விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பல மாதமாக  தினகரனை ஆதரிச்சிக்கிட்டுதான் இருந்தாங்க. 
 

admk



ஆனா இப்பதான் அந்த மூணு பேரும் தினகரனுக்கு ஆதரவா தேர்தல் பிரச்சாரம் செய்தாங்கன்னு குற்றம் சாட்டி, அவங்க பதவியைப் பறிக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பில் கொறடா ராஜேந்திரன் களமிறங்க, சபாநாயகர் தனபால் மூலம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் அவர்களும் இதை நீதிமன்றத்தில் சென்று அணுகி தடை வாங்கியுள்ளனர்.

மேலும்  சம்பந்தப்பட்ட மூவரும் "நாங்க அ.தி.மு.க. தலைமையின் கீழேயே அதன் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்போம்'னு சபாநாயகருக்கு விளக்கம் அனுப்பியிருக்காங்க. அதை சபாநாயகர் ஏற்பதும் மறுப்பதும் அவர் விருப்பத்தைப் பொறுத்தது. இந்த நிலையில் அந்த சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம் தி.மு.க. கொடுத்து, பரபரப்பின் அளவை பல மடங்காக அதிகரிக்க வைத்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முனையும் போது,  தி.மு.க. ஏன் குறுக்கே வருதுன்னும், இதில் இருந்தே அந்த இரு கட்சிகளுக்கும் உள்ள  உறவு தெரியுதேன்னும் முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார்.இதற்கு பதில் கூறும் விதமாக  தி.மு.க. தரப்பு சபாநாயகரால் விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் அந்த மூன்று எம்.எல் .ஏ.க்களும் தினகரன் ஆதரவாளர்கள் என்பது இந்த உலகுக்கே தெரிஞ்ச விசயம். 

 

dmk



அப்படியிருக்க ஆரம்பத்திலேயே அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கலை?  இப்ப நடந்த நாடாளுமன்றம் மற்றும்  சட்டமன்ற இடைத் தேர்தல்கள்ல தங்களுக்குச் சாதகமான முடிவுகள் இருக்காது என்பதைப் புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி தரப்பு, ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று , மெஜாரிட்டி எண்ணிக்கையான 118-ஐக் குறைக்கும் வகையில், ஜனநாயகத்துக்கு விரோதமா இந்த மூவரையும் பதவி நீக்கம் செய்யப் பார்க்குது.  இதைத் தடுக்கத்தான், எங்க கட்சி சார்பில் சபாநாயகர்  மீது நம்பிகையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டசபைச் செயலாளரிடம் கொடுத்திருக்கிறோம்னு விளக்கம் கொடுத்தனர். மே 23க்கு பிறகு எந்த மாதிரி சூழல் வரும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் அதை வைத்தே நடவடிக்கை எடுக்கலாம்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.