Skip to main content

தேனியில் எடுத்த நடவடிக்கையை ஏன் கடலூர் மாவட்டத்தில் எடுக்கவில்லை! கேள்வி எழுப்பும் அதிமுகவினர்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Why the action taken in Theni was not taken in Cuddalore district! Questions by admk

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 21 மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. சில இடங்களில் நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தலில் வென்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். அதேபோல், நேற்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. 

 

இதில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 20 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றன. இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளராக திமுக தலைமை அய்யம்மாள் என்பவரை அறிவித்தது. ஆனால், அவருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த செண்பகம் என்பவர் நகர்மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதனால், அங்கு மறைமுக தேர்தல் நடந்தது. 

 

இதில், மொத்தமுள்ள 27 ஓட்டுகளில் அய்யாம்மாள் 16 ஓட்டுகள் பெற்று நகராட்சித் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார். 

 

இந்நிலையில், அதிமுகவினர் அய்யாம்மாளுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் நகரச் செயலாளர் பி.ராஜேந்திரன் உள்பட 6 அதிமுக நகரமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டது. 

 

அதேசமயம், கடலூர் மாவட்டம் 33 வார்டுகள் கொண்ட பண்ருட்டி நகராட்சியில், 24 வார்டுகளை வென்ற திமுக கூட்டணி, அதன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சிவா என்பவரை அறிவித்தது. அவரை எதிர்த்து மற்றொரு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதனால், அங்கேயும் மறைமுக தேர்தல் நடந்து. இந்தத் தேர்தலிலும், அதிமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். இதில், ராஜேந்திரன் 33ல் 17 வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவரானார். இங்கும் அதிமுகவினர் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பேச்சுகள் எழுந்துள்ளது. 

 

இந்நிலையில், தேனியில் ஆதரவாக வாக்களித்த அதிமுகவை நீக்கிய அதிமுக ஏன் பண்ருட்டியில் நீக்கவில்லை என அதிமுகவினரே கேள்வி எழுப்பிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.