Skip to main content

அரசியல் களத்தில் ரஜினியை நேரடியாக விமர்சிக்கப் போவது யார்?

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Who is going to directly criticize Rajini in the political arena?

 

ரஜினியின் அரசியல் குறித்து திமுக, அதிமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்பினால், ஜனநாயகத்தில் கட்சித் துவங்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வருவதை அவர் அறிவிக்கட்டும். அப்போது பார்க்கலாம் என்கிற ரீதியிலேயே பதில் அளித்தனர். அரசியல் வருகையை அவர் உறுதிசெய்துவிட்ட பிறகு அதே கேள்வியை அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது, கட்சியை அவர் துவங்கட்டும். அதன் பிறகு பதில் சொல்கிறோம் என்று நழுவி விடுகின்றனர்.

 

இந்த நிலையில், நேரடி அரசியலில் அவர் இறங்கும் போது, ரஜினியை நேரடியாக விமர்சிக்க திமுக, அதிமுக கட்சித் தலைமைகள் முன் வருமா? என்கிற கேள்விகள் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளிடம் எதிரொலிக்கவே செய்கிறது.

 

இது குறித்து இரு கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணியினரிடம் நாம் விசாரித்த போது, எங்களுக்குத் தெரிந்தவரை ரஜினியைக் கடுமையாக விமர்சிக்க, எங்களின் தலைவர்கள் முன் வரமாட்டார்கள். திமுகவையும் அதிமுகவையும் பற்றி ரஜினி விமர்சித்தால் கூட, அதற்கு தாங்கள் பதில் சொல்வதை தவிர்த்து, இரண்டாம் நிலை தலைவர்களை வைத்தே பதிலடி தருவார்கள். அதேசமயம், தகவல் தொழில் நுட்ப அணியினராகிய எங்கள் மூலம் ரஜினியின் இமேஜை குறைக்கும் வகையில் மீம்ஸ் போட வலியுறுத்துவார்கள். இப்போது அதுதான் நடந்து வருகிறது என்று விவரிக்கிறார்கள்.

 

Who is going to directly criticize Rajini in the political arena?

 

தமிழக அரசியலின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைமைகளின் நிலை இப்படிப்பட்டதாக இருக்கும் நிலையில், ரஜினியை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் ஒரே நபர், நாம் தமிழர் சீமான் மட்டுமே! இப்போதே அந்தப் பணியைத் துவக்கிவிட்டார். தேர்தல் களத்தில் இன்னும் அதிகமாக விமர்சிப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.