Skip to main content

இரட்டை இலை வாக்குகள் யாருக்கு? கடும்போட்டியில் சாருபாலா தொண்டைமான்! திருநாவுக்கரசர்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

திருச்சி தொகுதியை இரண்டு முறை தொடர் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிகவுக்கு தாரைவார்த்தது. இதனால் இரட்டை இலை சின்னம் தேர்தல் களத்தில் இல்லை.

 

charubala thondaiman

 

இதனால் இரட்டை இலை வாக்குகளை வளைப்பதற்கு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
 

காரணம் இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றிபெற்ற எம்.பி பா.குமார். கடைசியாக நடந்த தேர்தலில் திமுக – அதிமுக நேரடியாக களத்தில் சந்தித்தனர். அந்த தேர்தலில் அதிமுக ப.குமார் 4,58,478 மற்றும் திமுக அன்பழகன் 3,08,002 முன்றாவது அணியாக இருந்து போட்டியிட்ட தேதிமுக ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் 51,537 வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அதிமுக பா.குமார். 
 

thirunavavukarasar

 

திமுக நேரடியாக களத்தில் நின்றே 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதால் இந்த முறை திருநாவுக்கரசர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால் அவருக்கு கூடுதலாக வாக்குகள் வேண்டும் என்பதால் இரட்டை இலை வாக்குகளை பெற அவர் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகிறார். 
 

அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பிரச்சாரத்தின்போது இரட்டை இலை சின்னம் நேரடியாக போட்டியில் இல்லை. அதனால், அதற்குரிய ஓட்டுகளை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோம் எங்கள் சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடும் எனக்கே வழங்கிட வேண்டுமென்று கேட்கிறார்.
 

அதேபோல சாருபாலா அதிமுக கூட்டணியில் இருக்கும்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அப்போது இருந்தே அதிமுக பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும், அப்போது கோட்டதலைவராக இருந்தவர்தான் தற்போது அமமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பதால் தற்போது இரட்டை இலை வாக்குகள் எல்லாம் சாருபாலவுக்கே வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

dmdk

 

அதே நேரத்தில் திருநாவுக்கரசரும் தன் பங்குக்கு இரட்டை இலை சின்னம் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு தான் நெருக்கமானவர் என்பதாலும் இரட்டை சின்னம் திருச்சியில் போட்டியிடாததால் எனக்கே போடுங்கள் என்றும் எம்.ஜி.ஆர் காலத்து பழைய அதிமுக பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் திருநாவுக்கரசர் பேசி வருகிறார். இந்த வாக்குகள் தனக்கு பயன்படும் என்று வெகுவாக நம்புகிறார். இப்படி முரசு சின்னத்திற்கு போக வேண்டிய வாக்குகளை இவர்கள் இருவருக்கும் இடையே இரட்டை ஓட்டுகளை வாங்க போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதவை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள். மேலும் கண்ணுக்கு எதிரே தனக்கு வர வேண்டிய வாக்குகள் பறிபோகிறதே என்று வருந்துகிறார் தேமுதிக வேட்பாளர் தர்மபுரி மருத்துவர் இளங்கோவன். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்