ஊடகங்களில் செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிமுக தலைமை நீக்கியது.

ops-eps

Advertisment

அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகைகளிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் தங்கள் பணிகளை தொடரலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Advertisment

அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக சி.பொன்னையன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, வைகைச்செல்வன், ஜெ.சி.டி. பிரபாகர், கோ.சமரசம், ம.அழகுராஜ் என்கிற மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், ஏ.எஸ்.மகேஸ்வரி, ஆர்.எம்.பாபு முருகவேல், எம்.கோவை சத்யன், நிர்மலா பெரியசாமி, லியாகத் அலிகான், கே.சிவசங்கரி, வை.ஜவஹர் அலி, அ.சசிரேகா ஆகிய 16 பேர் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.