Skip to main content

''மோடி ஸ்டாலினை பார்க்கும்போதெல்லாம் ஒன்று சொல்லுவார்''- சுவாரசியம் பகிர்ந்த துரைமுருகன்!

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

"Whenever Modi sees Stalin, he says one thing" - Duraimurugan shared the impression on the stage!

 

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதோடு தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''நான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக நினைக்கக் கூடாது, அண்ணா ராஜ்ய சபாவிற்கு போன பிறகுதான் அவரது அறிவாற்றலை கண்டு அத்தனை பேரும் வாய் பிளந்து நின்றார்கள். நீண்ட காலம் அவர் டெல்லி வாசத்தில் இல்லை. அதற்குப் பிறகு கலைஞர் வந்தார். அவர் முதலமைச்சராகி முதல் முதலாக டெல்லிக்கு போன பொழுது அவரை மிக சாதாரணமாக நினைத்தார்கள். முதல் முதலில் அவர் மொரார்ஜி தேசாயை பார்க்கப் போனார். 5 மணிக்கு அவருக்கு அவகாசம் கொடுத்தார்கள். ஆனால் டிராபிக் ஜாமில் 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். போனவரை முதல் முறையாக ஒரு சீப் மினிஸ்டர் வருகிறார் என்று மொரார்ஜி தேசாய் 'வாழ்த்துக்கள் எப்படி இருக்கிறீர்கள், தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் உங்கள் சேவை தேவை' என்று சொல்லவில்லை கலைஞருக்கு வாழ்த்து கூட சொல்லாமல், மொரார்ஜி தேசாய் சொன்னாராம் 'நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதற்கு' என்று எடுத்த உடனே நெருப்பைக் கொட்டி இருக்கிறார்.

 

அந்த இடத்தில் கலைஞர் சொன்னார் 'அந்த நாற்காலியில் அமரக் கூட எனக்கு மனம் இல்லை. இருந்தாலும் நெருப்பின் மேல் உட்காருவது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்' என்று. அடுத்த கேள்வி கேட்டாராம் 'எங்கே வந்தீர்கள்' என்று, 'நிதி கேட்பதற்காக வந்திருக்கிறேன். நீங்கள்தான் நிதி அமைச்சர்' என்று கலைஞர் சொன்னாராம். அதற்கு 'நிதி எங்கே கொட்டி கிடக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கிறது உனக்கு அறுத்துக் கொடுப்பதற்கு' என்று இரண்டாவதாக சாடி இருக்கிறார். அதுவரையில் பொறுமைகாத்த கலைஞர் சொன்னாராம் 'பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது. பிறகு உம் தோட்டத்தில் எப்படி ஐயா இருக்கும்' என்று கேட்ட பொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் மொரார்ஜி.


 

"Whenever Modi sees Stalin, he says one thing" - Duraimurugan shared the impression on the stage!

 

அப்படி முதல் முறையிலேயே புறக்கணிக்கப்பட்ட தலைவர் பிறகு பிரதமர்களை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசுத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு யார் என்று கேட்டால் அது கலைஞரால்தான் முடியும் என்று இந்தியாவே ஒத்துக் கொண்டு போனது. ஆனால் ஸ்டாலின் கட்சியின் தலைவராகி, முதலமைச்சரான உடன் இன்றும் அதிகமாக அவருடைய கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை அகில இந்தியா ஒத்துக் கொண்டிருக்கிறது. நமக்குள் ஆயிரம் வேற்றுமை உண்டு பிஜேபிக்கும் நமக்கும். ஆனால் பிரதமர் மோடி ஸ்டாலினை பார்க்கிறபோதெல்லாம் சொல்வார் 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின். உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ வந்தால் என் வீட்டிலே தங்கு. உன்னை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்கிற அளவுக்கு இவருடைய கண்ணியம் பண்பாடு தலைதூக்கி நிற்கிறது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது