Skip to main content

“சீட்டு ஒதுக்கும்போது தான் தெரியும் எல்லாரும் என்ன ஆகப்போகிறார்கள் என்று...” - செல்லூர் ராஜு பேட்டி

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

nn

 

'திமுகவில் தற்போது வாய் பேசாமல் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், சீட்டு என வரும்போது என்ன ஆவார்கள் என்று தெரியாது' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், 'இன்னும் பாக்கல. டைம் இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன். எப்படியும் பார்த்து விடுவேன்' என்றார்.

 

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “விரைவாக மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக கார் வாங்கி இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். எங்கள் பொதுச் செயலாளருக்கு எல்லாமே தெரியும். அவர் வல்லவனுக்கு வல்லவன். அவரைப் பொறுத்த அளவிற்கு எது செய்ய வேண்டும்; எது கட்சிக்கு நல்லது; எது சிறப்பாக வெற்றியை கொடுக்கும் என்பதை தீர்மானித்து செய்வார்” என்றார்.

 

'பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என ஓபிஎஸ் சொல்லி உள்ளாரே' என்ற கேள்விக்கு, ''அவரவர் சொல்லிக் கொள்ளலாம். எங்களுக்கு அதைப்பற்றி தெரியாது. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். இப்பொழுது கூட்டணிக்கான தருணம் கிடையாது. தருணத்திற்கு இன்னும் நாள் இருக்கிறது. கூட்டணி இப்பவே எப்படி முடிவாகும். முதலில் அங்கு இருப்பவர்கள் பெர்மனென்ட்டாக இருப்பார்களா? திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பார்களா? என்னதான் அவர்கள் வாய் பேசாமல் இருந்தாலும் சரி, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கியது சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் கூட செந்தில் பாலாஜியை கண்டிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏதாவது இருக்கிறதா? அவர்கள் ஏதாவது கண்டித்தார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதற்கு 500, 1000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஏன் செலவழித்தார்கள் என்று கம்யூனிஸ்ட் கேட்டார்களா? புரட்சி புயல் வைகோ கேட்டாரா? யாரும் பேசவில்லை. என்னதான் பேசாமல் இருந்தாலும் சரி, சீட்டு ஒதுக்கும்போது தான் தெரியும் எல்லாரும் என்ன ஆகப் போகிறார்கள் என்று'' என்றார்.

 

'திமுக கூட்டணி நிரந்தரமாக இருக்காது என்று சொல்கிறீர்களே, உங்கள் அதிமுக - பாஜக கூட்டணி?' என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ''நாங்க ஆளுங்கட்சியாக இல்லை; நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மக்கள் பணி ஆற்றுகிறோம். செல்வாக்கு மிக்க பொதுச்செயலாளர் இருக்கிறார். அவர் பார்த்து முடிவு பண்ணுவார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.