Skip to main content

''இதனுடைய மர்மம் என்ன?'' - அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

"What is the mystery of this?" - ADMK Jayakumar asked

 

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு, போராட்டம் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர்.

 

அதன்படி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தக்கோரி இன்று தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்தப் போராட்டத்தில் ஓபிஎஸ் உடன் அ.ம.மு.க தினகரனும் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி இன்று தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

"What is the mystery of this?" - ADMK Jayakumar asked

 

அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ''நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லித்தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின்  இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவாளருமான ஜெயக்குமார் பேசுகையில், ''ஓபிஎஸ் அன்று யாரை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார். சசிகலா, டி.டி.வி.தினகரன், அவர்களைச் சார்ந்த அந்த குடும்பத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். அப்புறம் டிடிவி காலிலேயே மீண்டும் விழுந்தார். டி.டி.வியே, 'ஓபிஎஸ் என்னை சந்தித்தார்; என் வீட்டுக்கு வந்தார்' என்பதை ஒத்துக் கொண்டார். இதனால் ஓபிஎஸ் எப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பவாதி, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை ஓபிஎஸ் அரங்கேற்றுகிறார் என்பதை தமிழ்நாட்டு மக்களும் அதிமுகவினரும் உள்ளபடியே உணர்ந்திருக்கிறார்கள். திரைமறைவில் சந்தித்துக்கொண்ட ஓபிஎஸ், டிடிவி தற்போது பொதுவெளியில் சேர்ந்தார் போல காட்சியளிக்க தற்பொழுது ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள். 

 

"What is the mystery of this?" - ADMK Jayakumar asked

 

திமுக ஆட்சியில் இப்போதைய முதல்வர் ஆணையின்படி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அதாவது ஐ.ஜி தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாறிய பிறகு ஐஜி தலைமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர் தனது 790 பக்க விசாரணை அறிக்கையையும் நீலகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இந்நிலையில் திடீரென இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றுகிறார்கள். உதவி கண்காணிப்பாளர் ஏ.எஸ்.பி அந்தஸ்துள்ள ஒரு அதிகாரி விசாரித்து வருகிறார்.  ஐஜி தலைமையில் 90% முடிந்து 790 பக்கங்கள் அறிக்கை கொடுத்தாச்சு. அதன் பிறகு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஏன் அவரை விட குறைந்த பதவியில் உள்ள ஏ.எஸ்.பி தலைமையில் இப்பொழுது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனுடைய மர்மம் என்ன?'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.