Skip to main content

“அவர் செய்தது தவறுதான்; இதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை” - ப. சிதம்பரம்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

“What the governor did was wrong; I have no hesitation in saying this”- P. Chidambaram

 

ஆளுநர் செய்தது தவறுதான் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

 

நேற்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை குறித்தான சட்ட மசோதாவை கடந்த ஆண்டு 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் நேற்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “அவசர சட்டம் பிரகடனம் செய்யும் போது ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டார். அதே அவசர சட்டம் சட்ட வடிவமாக வரும்போது இதில் எப்படி குறை சொல்கிறார். 234 உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்புவதே தவறு. ஆளுநர் செய்தது தவறு. அதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றம் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசனத்தின் படி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனையில் மாநில அரசு பங்கேற்கவில்லை; ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
The State Government did not participate in the South District Flood Impacts Consultation; Governor's House Allegation

கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக சீரடைய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் நடத்திய வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டை தமிழக ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசும் அதன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. மழை பாதிப்பால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது, மாநில அரசு அழைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை செய்ய மத்திய அரசு துறையில் தயாராக உள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கூட்டத்தில் பங்கேற்ற சில மத்திய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மீட்புகளை மேற்கொள்வது தொடர்பாக தெளிவற்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர் என்றும் ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டி உள்ளது.

Next Story

“டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது” - கவிஞர் வைரமுத்து

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Vairamuthu's comment on Sankaraiah not conferring doctorate

 

தமிழ்நாடு அரசு சார்பில் 100 வயதைக் கடந்து வாழும் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக செனர் மற்றும் சிண்டிகேட், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மேலும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருந்தார். 

 

இந்த நிலையில் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காதது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

 

“டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது

இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்

பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது

கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய் சிவக்கப் போகிறது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.