Advertisment

“வடக்கிலிருந்து தெற்கு வரை வளர்ந்துள்ளோம்” - பிரதமர் மோடி

publive-image

டெல்லியில் பாஜகவின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின் விழாவில் பேசிய மோடி, “1984 ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் துவங்கிய பயணம், 2019 ஆம் ஆண்டு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக பாஜக வளர்ந்திருக்கிறது. பல மாநிலங்களில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம். கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை ஒரே பான் இந்தியா கட்சி பாஜக மட்டுமே. உலகின் ஒரே கட்சியாக மட்டுமின்றி எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் பாஜக உள்ளது.

Advertisment

வளர்ந்த மற்றும் நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் ஒரே நோக்கம். போட்டியாளர்களின் குறைகளை ஆராய்வதற்கு பதிலாக, மக்களிடத்தில் நேரடியாக களமாடியதால் இந்த வெற்றி நமக்கு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது இவ்வளவு நடவடிக்கைகளை எடுப்பது இதுவே முதல்முறை. பாஜக ஆட்சியில் பொருளாதார குற்ற வழக்குகளில், 1 லட்சத்து பத்தாயிரம் கோடிரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் ஒன்று திரண்டுள்ளன. புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சிதைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறோம். அதனால் தான் அரசியலமைப்பு சட்டங்கள் மீதுவீண் பழி சுமத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

Advertisment

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe