ADVERTISEMENT

’’வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை’’ - கிரண்பேடி பதிலடி

06:11 PM Jun 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார். முதல்மைச்சர் நாராயணசாமி வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவது தவறில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT