Skip to main content

லண்டனில் சமீபத்தில் மறைந்த தமிழரின் உடலை தமிழகம் வரவழைத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
vinoth - ariyalur district - London

 

அரியலூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்‌.ஆர். கார்த்திக்கின் சகோதரர் வினோத், இங்கிலாந்து - ஸ்காட்லேண்டில், கடந்த 23.05.2020 அன்று மாரடைப்பால் காலமானார்.

 

அவரது உடலை தமிழகம் எடுத்து வருவதற்கு உதவக்கோரி, அவரது குடும்பத்தினர் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டனர்.

 

உடனடியாக, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர் ஆகியோரை கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, வினோத் உடல் அங்குள்ள அவரது மனைவி, மகள் உடனே இந்தியா வருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுக்கொண்டார்.

 

 

thamizhachi thangapandian

 

உடன், லண்டன் தூதரகத்திலிருந்து 'கரோனா ஊரடங்கு காரணமாக, விமான சேவை இல்லை, எங்கள் தளத்தில் பதிவு செய்யுங்கள், விமானம் இயங்கும்போது முன்னுரிமை தருகிறோம்' என்று
பதில் வந்துள்ளது. உடனே, தமிழச்சி தங்கபாண்டியன், “இதுபோன்ற பொதுவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.இறந்தவரின் உடலை தமிழகம் கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். விமானங்கள் இயங்கவில்லை என எனக்கு நன்றாகத் தெரியும். இறந்தவர் உடல், அவரது மனைவி, மகளை தமிழகம் என்றில்லை, இந்தியாவில் எந்த விமான நிலையத்திற்கு விமானம் இயக்கப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வையுங்கள்” என அழுத்தம் கொடுத்தார்.

 

தொடர்ச்சியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரியிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கொடுத்த கோரிக்கைகள், தொலைபேசி வழி நினைவூட்டல் காரணமாக, 16.06.2020 அன்று மதியம் 1.30 மணி அளவில் லண்டனில் இறந்த வினோத்தின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

 

தமிழக அரசின் பொதுத்துறை சிறப்பு செயலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம், வினோத்தின் உடல் மற்றும் குடும்பத்தினர்கள் உடனடியாக, சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், உதயநத்தம் செல்வதற்கு உரிய அனுமதியினையும், தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுத் தந்திருந்தார். அதன்படி, அவரது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம், உதயநத்தத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இன்று (17.06.2020), அடக்கம் செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.