Skip to main content

பழங்குடி இருளர் இன மாணவிக்கு சாதி சான்று கேட்டு விடிய விடிய போராட்டம் 

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Viluppuram

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்து உள்ளது தி. பரங்கினி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் உயர்கல்வியில் சேர ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது என்பதால் அவர் விழுப்புரம் கோட்டாட்சியருக்கு பல மாதங்களுக்கு முன்பே சாதி சான்று கேட்டு மனு செய்துள்ளார்.

 

இதில் விசாரணை செய்வதில் கால தாமதம் ஆகியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் தனலட்சுமிக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் இன மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கோட்டாட்சியரிடம் விவரம் கேட்டுள்ளார். கோட்டாட்சியர் அவர்கள் தனலட்சுமி குடும்பத்தினர் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்பது சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. எனவே தனலட்சுமி மனு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து மானுடவியல் பேராசிரியர் ஒருவரை வரும் 20ஆம் தேதி ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே அங்கிருந்து வரும் பேராசிரியர் அவர்களின் ஆய்வு முடிவுக்கு பிறகு தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெறிவித்துள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பொதுவாக பழங்குடியின மக்கள் எஸ்டி ஜாதி சான்றிதழ் கேட்கும்போது அவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே சான்றிதழ் பெற்றிருந்தால் அதன் அடிப்படையிலும் அவர்கள் உறவுமுறைகளின் அடிப்படையிலும் விசாரணை செய்து கோட்டாட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவர்கள் பழங்குடியினர்தானா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் பல்கலைக்கழகத்திலிருந்து மானுடவியல் பேராசிரியர்கள் நேரடியாக வந்து சம்பந்தப்பட்ட இனத்தின் மக்கள் வாழ்வியலை அவர்கள் உருவத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு சிபார்சு செய்வார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்குவது நடைமுறையில் உள்ளது. அதே நடைமுறையில் தான் தனலட்சுமிக்கும் மானுடவியல் பேராசிரியர் ஆய்வுக்குப் பிறகு ஜாதி சான்றிதழ் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தனலட்சுமியின் உறவினர்கள் தனலட்சுமியின் தந்தைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடி இருளர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா அரசு கொடுத்துள்ளது. இதேபோன்று பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் அவரது மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல என்கிறார்கள் தனலட்சுமிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.