Skip to main content

பாஜக வேட்பாளரை வாக்கு சேகரிக்கவிடாமல் தடுத்து விரட்டிய கிராம மக்கள்...!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

திருவாடானை அருகே பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வாக்கு சேகரிக்கவிடாமல் தடுத்து விரட்டிய கிராம மக்கள். இதனால் அமைச்சர் மணிகண்டன் பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் அப்செட்டாகி திரும்பிவிட்டனர்.

 

bjp

 

. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 2018 - 19 க்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளனர். 


இதனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தங்களது வீடுகளிலும் கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பி.ஜே.பி. கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மற்றும் சில நிர்வாகிகள் திருவாடானை தாலுகா பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றபோது கூகுடி கிராமத்தில் வாக்கு சேரிக்க சென்ற கூட்டணி கட்சி வேட்பாளர், முக்கிய பிரமுகர்கள், மற்றும் அமைச்சரையும் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி எங்களுக்கு வழங்கவேண்டிய  பயிர் காப்பீடு, இழப்பீடு தொகை என்ன ஆச்சு என்று கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. 
 


வாக்குவாதம் முற்றியதால் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கூகுடி கிராமத்தில் வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.


 இந்நிலையில் அப்பகுதியில் பிரச்சார பரப்புரையை முடித்துவிட்டு தொண்டி பகுதியில் மகாசக்தி புரம் தெருவில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு கூடியிருந்த மீனவ மக்கள் எங்களது குடிநீர் பிரச்சனையை நீண்ட நாட்களாக கூறி ஒவ்வொரு முறையும் வேட்பாளர் வரும்போது செய்து தருவதாக சொல்வதோடு சரி இதுவரை யாரும் செய்யவில்லை. மேலும் எங்களது ரேசன் கடையும் சரிவர செயல்படவில்லை இதை சரி செய்து தாருங்கள் என்று முற்றுகையிட்டனர்.


ஆனால், அதை அமைச்சர் மணிகண்டன் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் செவி கொடுத்துக் கேட்காமல் தங்கள் வேலையை அதாவது பொன்னாடை போற்றுதும் நிர்வாகிகள் சந்திப்புமாயிருந்தார்கள். இதனால் ஆத்திரமுற்ற  பெண்கள் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கோஷம் எழுப்பியதால் அங்கு வாக்கு சேகரிக்க  முடியாமல் திரும்பினர். இதனால் பி.ஜே.பி. கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.