விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ளது. கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் இன்று அன்னியூரில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இவருடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர்
எஸ்.குணசேகரன், கோல்டு டி.பிரகாஷ், அன்னியூர் ஊராட்சி செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.