Skip to main content

அது எப்ப? சரியா சொல்லுங்க... விஜயகாந்த் அறிக்கைக்கு மன்சூர் அலிகான் ஆவேசம்

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ - மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 


 

 

 

Vijayakanth


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
 

நக்கீரன்  : அண்மையில் நீட் தேர்வை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
 

மன்சூர் : அது எப்ப?
 

நக்கீரன்  : 07.07.2019 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்...
 

மன்சூர் : நீட்டை ஆதரிச்சா? 
 

நக்கீரன்  : வரவேற்கிறார்...
 

மன்சூர் : யாரு? பிரேமலதா விஜயகாந்த்தா? அவரோட மச்சான் சுதீஷா?
 

நக்கீரன்  : தேமுதிக தலைவர் பெயரில்தான் அறிக்கை வெளிவந்திருக்கிறது...
 

மன்சூர் : என்ன போட்ருக்கு... என்ன செய்தி சொன்னாங்க... சரியா சொல்லுங்க... 


 

 

நக்கீரன்  : இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்கின்ற முறையில், ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்... (விஜயகாந்த் அறிக்கை)
 

மன்சூர் : எதுக்கு ஆதரிக்கிறார்... அவர் எத்தனை படம் எடுத்திருக்கிறார்... அவர் படமெல்லாம் பாத்தீங்கல்ல... அவர் இந்த மாதிரி திட்டத்தையெல்லாம் ஆதரிக்கிறவரா? விஜயகாந்த் பெயரை கெடுக்காதீங்க. அவரோட நல்ல பெயரை கெடுங்காதீங்க... ஆயிரக்கணக்கான சாதனைகளை அவர் பண்ணிருக்கிறார். என்னைப்போல நூற்றுக்கணக்கான கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஏழைகள் பக்கம் நின்ன மனுஷன். அப்படிப்பட்ட விஜயகாந்த் இப்படி பேசுவாரா? வெளியே வந்து அவரை நாலே நாலு வார்த்தை சொல்ல சொல்லுங்க. 


 

Mansoor Ali Khan


நக்கீரன் : சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு என்கின்ற செய்தி வந்த அதே நாளில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், எனவே இதை அரசியலாக்காமல்... (விஜயகாந்த் அறிக்கை)
 

மன்சூர் : என்ன அரசியலாக்க வேணாம். அரசியல் இல்லாம இது என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட்டை விரட்டுவோம்.
 

நக்கீரன் : எல்லாவற்றையுமே அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டினுடைய வளர்ச்சி என்ற வகையில் சிந்திக்கவேண்டும்... (விஜயகாந்த் அறிக்கை)
 

மன்சூர் : மறுபடியும் மறுபடியும் இதென்ன வசனமா? என்ன அரசியல் படுத்தாத... அரசியலை மாத்தி தமிழ்நாட்டை நாசம்பண்ணி, யாருக்கு வேண்டும் நீட்... நாம் தமிழர் ஆட்சிக்கு வரும் நீட் தேர்வை ரத்து செய்யும். இவ்வாறு கூறினார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.