தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் தேமுதிக சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதே போல் இன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO WATER PURIFIER) வழங்கப்பட்டன. மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மணவர்கள் விஜயகாந்திற்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.