Skip to main content

திமுகவின் வெற்றி இவர்களால் தான்... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அமித்ஷாவின் அதிரடி திட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து மத்திய உளவுத் துறையான ஐ.பி.யிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்கள் தந்த ரிப்போர்ட்டில் தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களான தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு, விழுப்புரம் மா.செ. பொன்முடி, எம்.பி. ஆ.ராசா போன்றவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தந்து, "இவர்களை தேர்தல் களத்தில் முடக்கினால் தேர்தலில் பாதி வெற்றி' என்றுள்ளது. அதனை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் தந்து, தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர்.

 

dmk



"ஆளும்கட்சியாக இருந்தாலும் ஜாக்கி இல்லாத குதிரையாக உள்ளது அ.தி.மு.க. தேர்தல் நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். உத்தரவையெல்லாம் அவர்கள் கட்சியினர் மதிக்கமாட்டார்கள். இவர்களை தி.மு.க. தலைவர்கள் ஈஸியாக மடக்கி விடுவார்கள். அதனால் தி.மு.க. பிரமுகர்களை பார்த்து பயப்படாத, பணத்தை தாராளமாக இறைக்கக்கூடிய ஆட்களை நாம் களத்தில் இறக்கினால், தி.மு.க. தலைவர்களை அவர்கள் மாவட்டத்தில் முடக்கிவிடலாம், அப்படி செய்தால் பாதி வெற்றி என்றுள்ளார்கள்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை எதிர்த்து, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. சார்பாக தேர்தல் வேலை செய்வதற்காக, வேலூர் எம்.பி. தேர்தலில் துரைமுருகன் மகனிடம் தோற்றுப்போன ஏ.சி. சண்முகத்தை கேட்டுள்ளது பா.ஜ.க. "நான் செலவு செய்கிறேன், எனக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் வேண்டும்' என அவர் கேட்டுள்ளாராம். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவை எதிர்க்க, சினிமா தயாரிப்பாளரும், ஃபைனான்ஸ் அதிபருமான தணிகைவேலை களமிறக்கலாமா என ஆலோசித்துள்ளது'' என்றார் உளவுத் துறையில் உள்ள முக்கிய அதிகாரி.

யார் இந்த தணிகைவேல்?

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் நகராட்சி சேர்மனாக, எம்.பி.யாக, எம்.எல். ஏ.வாக இருந்தவர் முருகையன். அவரது நெருங்கிய உறவினர் தணிகைவேல். மத்திய அமைச்ச ராக செஞ்சி.ராமச்சந்திரன் இருந்தபோது, அவருடன் இருந்ததால் டெல்லி லாபியும் அத்துப்படி. இவர் மீது வைகோவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். பின்னர், தே.மு.தி.க.வில் இணைந்து பதவியைப் பெற கோடிகளை வாரியிறைத்தார். சில சிக்கல்களில் சிக்கிய தணிகைவேல், தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். லோக்கல் பாலிடிக்ஸால் விலகிக்கொண்டார். தற்போது பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சிலரின் நட்பு பட்டியலுக்குள் சென்றுள்ளார். கடந்த 20 வருடங்களாக பணத்தை வாரி வழங்கி தனக்கென நகரத்தில் ஒரு இளைஞர் வட்டத்தினை உருவாக்கி வைத்துள்ளார்'' என்றார்கள் திருவண்ணாமலை அரசியலை அறிந்தவர்கள்.

 

bjp



தணிகைவேல் ஆதரவாளர்கள் ஒருவர் நம்மிடம், "கடந்த வாரத்தில் திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவை எதிர்க்க எந்தக் கட்சியிலும் பிரமுகர்கள் இல்லையாம். அதனால் என்னை கட்சியில் இணைத்து "அவருக்கு எதிராக அரசியல் செய்யுங்கள்' என பா.ஜ.க. மேல்மட்டத்தில் கேட்கிறார்கள். நானும் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன், 5 ஆயிரம் பேரோடு அங்கு போனால்தான் எனக்கு மரியாதை. நீங்கள் என்னுடன் வரவேண்டும் எனக் கேட்டார்'' என்றார்கள்.


இதுகுறித்து தணிகைவேல் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, "பா.ஜ.க.வில் நான் சேரப்போவது உண்மைதான். நிதியமைச்சர் நிர்மலா மேடம், முன்னிலையில் இணைகிறேன். யாரையும் எதிர்க்க வரவில்லை, தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்யப்போகிறேன்'' என்றார்.


இதுபற்றி டெல்லியுடன் நேரடித் தொடர்புடைய பா.ஜ.க. பிரமுகர் ஒருவருடன் நாம் பேசிய போது, "இன்னும் கட்சியில் சேராத தணிகைவேலை திரு வண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கிறார்களா என தெரியாது' என்றவர், "திருவண்ணாமலையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகள் ஐதராபாத்தில் செட்டிலாகியுள்ளார். அவர் சமீபத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார். அந்தப் பெண்மணி மூலமாக முரளிதரராவ் வட்டத்துடன் நெருங்கி, அங்கிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வட்டத்தில் இணைந்து டெல்லியில் தணிகைவேல் லாபி செய்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது'' என்றார். கூடுதலாக, "சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 11 தொழிலதிபர்களை செலவு செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளது எங்கள் கட்சி தலைமை. அதில் 4 கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் உட்பட 11 பேர் அடக்கம். அதில் சிலர் நேரடி அரசியலிலும் இறங்குவர், மற்றவர்கள் பண உதவி மட்டும் செய்யவுள்ளார்கள்'' என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.