Skip to main content

குரல் தன்னுடையது இல்லை என்று சொன்னார், குழந்தை தன்னுடையது இல்லை என்று சொன்னாரா? ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கேள்வி

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
Vetrivel jayakumar




டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

 

அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் ரொம்ப நல்லவர் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கட்சிக்கு அவப்பெயராக நினைக்கிறீர்களா?

 

பெண்கள் விசயத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக இருப்பார். அந்த விசயத்தில் என்றைக்கும் சமாதானம் ஆக மாட்டார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கிட்டு இந்த மாதிரி செயல் நடந்திருக்கிறது. ஜெயக்குமாரோடு இது முடியவில்லை. சில விசயங்கள் வெளியே வந்தால் அசிங்கமாய்விடும். 

 

ஜெயக்குமார் தவிர வேறு சிலரும் இருக்கிறார்களா?

 

இருக்கிறார்கள்.

 

யார் யார் என்று சொல்ல முடியுமா?
 

அது சொல்ல முடியாது. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களை திருத்திக்கொண்டால் சரி. என்னிடம்  வேறு ஆடியோ இருக்கிறது. 
 

அந்த ஆடியோவை வைத்து ஜெயக்குமாரை மிரட்டுகிறீர்களா?
 

நான் ஏன் மிரட்டுகிறேன். எனக்கும் அவருக்கும் சொத்து பிரச்சனையா இருக்கிறது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குரல் கொடுப்பது தவறா. நீங்கள் கொடுக்க மாட்டீர்களா. நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலம் செல்வதாக விசயத்தை பெரியதாக்கினார்கள். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டான இந்த பெண் விசயத்தை ஏன் பெரியதாக்கவில்லை. எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. 
 

பாதிக்கப்பட்ட பெண் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்களா?
 

என் பாதுகாப்பில் இல்லை.
 

ஜெயக்குமாரால் அந்த பெண் பாதிக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் அவர், இதன் பின்புலத்தில் நீங்கள் இருப்பதாக கூறுகிறாரே?
 

சொல்லட்டும். உண்மையை சொல்லட்டும். அதைவிட்டுவிட்டு ஏன் எங்கள் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பெயரை இழுப்பது ஏன். மாபியா கும்பல் என்கிறார். இப்போது அவர் மாமியார் கும்பலில் மாட்டிக்கிட்டார். 
 

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்கள் குடும்பமும் உங்களை அணுகினார்களா?
 

அதையெல்லாம் தேவைப்படும்போது சொல்வோம். தேவைப்படும்போது ஆதாரங்களோடு வெளிவரும். இல்லாததை நான் சொல்ல மாட்டேன். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தோம். இப்போது அது சிபிஐ வரை சென்றதா இல்லையா. 
 

அந்த பெண் குடும்பத்தினரின் சம்மதத்தோடுதான் ஆடியோவை வெளியிட்டீர்களா?
 

நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை. யார் இந்த ஆடியோவை வெளியிட்டார்கள் என்று எனக்கு தெரியாது. அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.
 

ஏற்கனவே அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சமயத்தில் இந்த மாதிரியான குற்றச்சாட்டு....
 

அது வேறு விசயம். இது பெண் பாதிக்கப்பட்ட விசயம். இந்த மாதிரியான விசயத்திற்கு பதவியில் இருந்து விலகிவிட்டுதான் விசாரணை நடத்த வேண்டும். குரல் தன்னுடையது இல்லை என்று சொன்னார், குழந்தை தன்னுடையது இல்லை என்று சொன்னாரா? 
 

இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிவேல் இல்லத்தில் டிடிவி தினகரன்... குடும்பத்தினருக்கு ஆறுதல் (படங்கள்)

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான வெற்றிவேல் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். 

 

இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளரும், வெற்றிவேலின் நெருக்கிய நண்பருமான டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

வெற்றிவேல் மறைந்தபோது டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.  

 

மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.  

 

என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிப்படச் சொல்லி, இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர். 

 

T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர்.  

 

'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. 

 

வெற்றிவேலின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

 

 

Next Story

ரஜினியை பாதித்த மரணம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

vetrivel ammk - rajinikanth actor - Karate R. Thiagarajan Congress

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் பொருளாளரும், டி.டி.வி தினகரனின் தளபதியாகவும் இருந்த வெற்றிவேலின் மரணம் அ.ம.மு.க.வை மட்டுமல்ல அதிமுகவையும் அதிர வைத்துவிட்டது. அந்தளவுக்கு இரண்டு கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தவர் வெற்றிவேல். 
           

வெற்றிவேலின் மறைவையறிந்து தனியார் மருத்துவமனைக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் வெற்றிவேலின் நீண்டகால நண்பரான கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட வெற்றிவேலின் உடலை கண்டு கதறினார் கராத்தே தியாகராஜன். கராத்தேவை தவிர வெற்றிவேலின் உடலுக்கு மரியாதை செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை மருத்துவமனை நிர்வாகம். 
      

அவரது மரணத்தை ரஜினிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் கராத்தே தியாகராஜன். கடந்த காலங்களில் பல முறையும், சமீபகாலங்களில் இரண்டு முறையும் ரஜினியை சந்தித்துள்ள வெற்றிவேல், ரஜினியின் நட்பை பொக்கிஷமாக பாதுகாத்தவர். அதனாலேயே, வெற்றிவேலின் மறைவு ரஜினியைப் பாதித்துள்ளது. வெற்றியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்திருக்கிறார் ரஜினி.

 

கடந்த காலங்களில் (1996) தி.மு.க - த.மா.கா கூட்டணி உறவு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும். இவர்கள்தான், அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த ரஜினியை அடிக்கடி சந்தித்து அரசியல் ரீதியான பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரஜினியிடம் சில விசயங்களைப் பேசுவதற்கு கராத்தே தியாகராஜனையும் வெற்றிவேலையும் தான் அனுப்பி வைப்பார் மறைந்த தலைவர் மூப்பனார். அந்தளவுக்கு, இவர்கள் இருவரும் மூப்பனாரின் தளபதிகளாக இருந்தவர்கள்.

 

அந்த வகையில் வெற்றிவேலின் மரணம் ரஜினியை வெகுவாகப் பாதித்தது. வெற்றிவேலின் மகன் பரத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்தியுள்ளார் ரஜினி!