Skip to main content

அம்மா ஆட்சி என்கிறார்கள்... பெண்ணுக்கு பாதுகாப்பில்லை... –எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேட்டி

Published on 23/07/2018 | Edited on 27/08/2018


 

velu

 

திருவண்ணாமலை நகரில் கடந்த வாரம் ரஷ்யாவில் இருந்து சுற்றுலா வந்த மாணவி அலீனா, 4 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை நேரடியாக கற்பழித்தவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு பயணியை முறையான தகவல் பெறாமல் தங்கவைத்த கிரிவலப்பாதையில் ஓம்சக்தி கோயில் எதிரேயுள்ள விடுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ எ.வ.வேலு, நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, மக்கள் தொகை பெருகிறது. இங்கு போதுமான காவல்நிலையங்கள் இல்லை என்பதை முதல்வராக தலைவர் கலைஞர் இருந்தபோது, நான் அமைச்சராக இருந்தபோது, விவகாரத்தை சொல்லி கிழக்கு காவல்நிலையம் என்கிற ஒன்றை உருவாக்கினேன். அந்த காவல்நிலையம் செயல்படுகிறது.

தற்போது ரமணாஸ்ரமம் பகுதியில் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் பலர் தங்குகின்றனர். இந்த நகரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் அதிகம் தங்குகின்றனர். அப்படி தங்கிய பெண்ணை தான் மானபங்கம் செய்துள்ளார்கள். அம்மா ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக திருவண்ணாமலை நகர மேற்கு காவல்நிலையம் என்பதை உருவாக்க வேண்டும். குற்றங்களை குறைக்க வேண்டும்.

 

 

திருவண்ணாமலையில் நடைபெற்ற வெளிநாட்டு மாணவி கற்பழிப்பு விவகாரத்தை செய்தித்தாளில் படித்தேன். அதுப்போன்று இனி நடக்ககூடாது என்றால் அப்பகுதி பாதுகாப்புக்கு புதிய காவல்நிலையம் உருவாக்க வேண்டும். அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என சொல்கிறார் முதல்வராகவுள்ள எடப்பாடி. 2013ல் காவலர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் தங்க வீடுயில்லாமல் இருக்கிறார்கள். அதனால் வீடுக்கட்டிதரப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டார். திருவண்ணாமலையில் கூட அதற்காக 10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதுவரை அந்த இடத்தில் ஒரு வீடுக்கூட கட்டவில்லை. இதுவரை கட்டிதரவில்லையே என அம்மா ஆட்சி என சொல்லிக்கொள்ளும் எடப்பாடியிடம் கேட்டபோது பதில்ய இல்லை. இது அம்மா ஆட்சியல்ல. சும்மா ஆட்சி, கமிஷன் ஆட்சி என்றவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வரிடம் நான் தரப்போகும் முதல் கோரிக்கை திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்பதே என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.