Skip to main content

செந்தில்பாலாஜி தனது பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு... சீமான் பேச்சு

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

 

seeman speech



 

அப்போது அவர், சீமான் தோற்போம் என்று தெரிந்தும் ஏன் போட்டியிடுகிறீர்கள்? என்று என்னை கேட்கிறார்கள். நீங்கள் சாவோம் என்று தெரிந்தும் ஏன் சாப்பிடுகிறீர்கள். பதில் இருக்கா? நீங்க வாக்கு செல்லுத்துங்கள். செலுத்தாமல் இருங்கள். எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நாங்கள் ஓட்டுக்காக கத்திக்கொண்டிருக்கவில்லை. இந்த நாட்டுக்காக கத்திக்கொண்டிருக்கிறோம். 
 

திமுகவை வீழ்த்திவிடுவீர்களா? அதிமுகவை வீழ்த்திவிடுவீர்களா? என்று கேட்கிறார்கள். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நீங்கள் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள். செய்ய மாட்டார்கள். இவர்களை ஒழிக்காமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 


 

திமுக, அதிமுக வெவ்வேறு கட்சி இல்லை. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வெவ்வேறு கட்சிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் இருவரும் ஒன்றுதான். அமமுகவில் இருந்து மொத்தம் மொத்தமாக திமுகவில் இணைகிறார்கள். செந்தில் பாலாஜி தனது பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கலைஞரை திட்டிக்கொண்டிருந்ததைப்போல, இப்போது ஸ்டாலின் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை திட்டிக்கொண்டிருப்பது என்ன கொள்கை. அப்போது இரண்டும் ஒரே கட்சிதான். நாங்கள் தேர்தலில் கூட்டணி வைத்து நிற்கிறோமா? ஏன்? மக்களை நம்புகிறோம். ஆனால் அவர்கள் வைக்கிறார்கள். ஏன்?. அவர்கள் மக்களை நம்பவில்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம். தனித்து நிற்கிறோம். இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.