Skip to main content

வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து - இந்திய தேர்தல் ஆணையம் முடிவு?

Published on 06/04/2019 | Edited on 06/04/2019
vellore parliamentary constituency



தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் துரைமுரகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஒரு அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். 
 

அதில், வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 

இதேபோல் வருமான வரித்துறையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கைகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்றடைந்துள்ளது. 



 

இதனையொட்டி வரும் திங்கள்கிழமை காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில், வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளிவர உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

இந்த அறிவிப்பு வெளிவந்தால் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மட்டும் நடைபெறும். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேபிள் கட்டணம் குறைந்ததற்கு வேலூர் தொகுதி தேர்தல் காரணமா..?

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற 10-ந்தேதி முதல் ரூ.130+ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அரசு கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.220 + ஜி.எஸ்.டி. கட்டணம் சேர்த்து ரூ.259.60 வசூலிக்கப்பட்டது. கட்டண குறைப்பு மூலம் இனி ரூ.153.40 வசூலிக்கப்படும். இதன்படி கட்டணம் ரூ.106 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. திடீர் என்று எதற்காக இந்த கட்டணம் சலுகை பற்றிய அறிவிப்பு வெளியானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. வேலூர் தொகுதி தேர்தலே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

cable tv charges reduced in tamilnadu

சில தினங்களுக்கு முன் வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் கேபிள் டிவி கண்டனம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு சில தகவல்களை தெரிவித்தார். மேலும், ஏழை எளிய மக்கள் எப்படி இந்த அளவுக்கு கட்டணம் செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் முதல்வர் தரப்புக்கு, உளவுத்துறை வாயிலாக சென்றுள்ளது. ஏற்கனவே, முத்தலாக் விவகாரத்தில் ரவீந்தரநாத் ஆதரவாக வாக்களித்ததால் முஸ்லிம்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் பிரச்சாரம் மேலும் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதாக கூறப்படுக்கிறது. இதனால், கேபிள் டிவி இயக்குநர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி, ஆலோசனையின் முடிவில் கட்டண குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

 

Next Story

திருமண நாளில் வேட்பு மனுதாக்கல் செய்த ஏ.சி.எஸ்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை  11 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனுதாக்கலின் முதல் நாளான இன்று அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

 

VELLORE LOK SABHA ELECTION ADMK ALLIANCE AC SHANMUGAM NOMINATION FILLED

 

 

 

அதிமுக உறுப்பினராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுகவின் கடிதத்தோடு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுதாக்கலுக்கு அமைச்சர் வீரமணி தலைமையில் அதிமுகவினர் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்துயிருந்தனர். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரும் தனது பெயரில் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள்.

 

 

VELLORE LOK SABHA ELECTION ADMK ALLIANCE AC SHANMUGAM NOMINATION FILLED

 

 

அந்த மனுவுடன் மாற்று மனுவை தங்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரில் தாக்கல் செய்வார்கள். அதன்படி ஏ.சி.சண்முகம் தனக்கு மாற்றாக தனது மனைவி பெயரில் மனுதாக்கல் செய்யவுள்ளார் என்கிறார்கள். இன்று ஏ.சி.சண்முகத்துக்கு திருமண நாள். அதனால் காலையில் கோயிலுக்கு தனது மனைவி, மகன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் சிலரோடு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதே மகிழ்ச்சியோடு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.