Skip to main content

கதிர்ஆனந்தை தகுதி நீக்கம் செய்... பின்னணியில் ஏ.சி. சண்முகமா???

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

வேலூர் பாராமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீடு, கல்லூரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை கடந்த ஏப்ரல் 1ந்தேதி சோதனை நடத்தியது. இதில் கதிர்ஆனந்தின் ஆதரவாளர் வீட்டில் இருந்து 11.4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் வாக்குசாவடி வாரியாக பெயர் எழுதி பணம் கவரில் போட்டு வைக்கப்பட்டுயிருந்தது.

 

vellore


இதுபற்றிய அறிக்கையை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது வருமானவரித்துறை. அந்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
 

இந்நிலையில் வேலூர் நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிரவன் என்கிற சுயேட்சை வேட்பாளர், கதிர்ஆனந்த் வீடு மற்றும் அவரது ஆதரவாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதை செய்தித்தாள் வழியாக கண்டோம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனால் இந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். என்னைப்போன்ற சாதாரண அடிதட்டு மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற தேர்தலில் போட்டியிடும் என்னைப் போன்றவர்களுக்காக தேர்தலை நிறுத்தாமல் அவரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
 

ஒரு தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்டால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்தியே தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அரவக்குறிச்சியிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் அப்படித்தான் செய்தது. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை. வேலூரில் மட்டும் தகுதி நீக்கம் செய், தேர்தலை நிறுத்தாதே என்பதற்கு பின்னணயில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் உள்ளார். இதுவரை 30 கோடி ரூபாய்க்கு செலவு செய்துள்ள அவர், தேர்தலை நிறுத்தினால் சரியாக வராது என்பதாலே தேர்தலை நிறுத்தகூடாது என்பதற்காக, எதிர் போட்டியாளரான கதிர்ஆனந்த்தை தகுதிநீக்கம் செய், தேர்தலை நிறுத்தாதே என ஒரு மனுவை சுயேட்சையை வைத்து தரவைத்துள்ளார் என்கிறார்கள் திமுக தரப்பில்.


அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் தொகுதி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.