Skip to main content

வேலூர் தேர்தலுக்கு ஏ.சி. சண்முகம் இவ்வளவு முயற்சி எடுப்பது ஏன்??? 

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று, வேலூரில் மக்கள் பட்டுவாடா செய்யப்படவிருந்த பணம் பிடிபட்டது. இந்தப் பணம் திமுகவிற்கு சொந்தமானது என்றும், துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.
 

vellore


இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி, தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து துரைமுருகனும், திமுகவும் அமைதியானது. இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 
 

இவர் அன்றிலிருந்து, இன்றுவரை வேலூரில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். தேர்தல் நிறுத்தப்பட்டதை முதலில் கண்டித்தார். பிறகு மே 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தபோது, இடைத்தேர்தல் நடக்கும்போது, வேலூரிலும் தேர்தல் நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார். இத்தனை நாட்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தவர், இன்று குடியரசு தலைவருக்கு மனு கொடுத்தார். ஆனால் அவர் இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் கூட்டணி கட்சிகள் அவருக்கு உரிய ஆதரவை தரவில்லை. 

 
இவர் இவ்வளவு முயற்சி செய்வதற்கு காரணம், வேலூரில் துரைமுருகனுக்கு கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை இருப்பதுபோல், ஏ.சி. சண்முகத்திற்கும் கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன. வேலூரில் இருவருமே ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு தேர்தல் நிதியும் கொடுத்துள்ளார் என்ற தகவலும் உள்ளது. இப்படியாக அவரும் தொகுதிக்காக நிறைய செலவு செய்துள்ளார். இந்த தேர்தல் ரத்தானால் ஒட்டுமொத்தமும் வீணாகிவிடுமே. மீண்டும் வேலூருக்கு தேர்தலை அறிவித்தால், மறுபடியும் முதலிலிருந்து செலவு செய்ய வேண்டுமே என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.