Advertisment

திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். கிட்டதட்ட கடந்த முறை தேர்தல் நின்றது உங்களால்தான். பணப்பட்டுவாடா செய்து, முறைகேடு நடந்ததினால் வேலூர் மக்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.

Advertisment

  a c shanmugam

மீண்டும் இப்போது ரூபாய் 23 லட்சம் ஒரு இடத்தில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே நீங்கள் பணத்தை பதுக்கி வைத்து, பணத்தை வைத்துதான் ஓட்டு வாங்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. பணத்தை பார்த்து மக்கள் மயங்க மாட்டார்கள். உண்மையான சேவையை, தொண்டை நிச்சமாக மக்கள் ஏற்பார்கள்.

மீண்டும் திமுக பணப் பிரச்சனையை கொண்டு வந்து வேலூர் தேர்தலை நிறுத்த வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் சாதனையை சொல்லி வாக்கு சேகரியுங்கள். வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்திவிடாதீர்கள் என்றார்.

maduraiSecretary to the Department of Education of Tamilnadu School Election parliment Vellore admk candidate ac shanmugam
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe