Skip to main content

''வாக்கு வங்கிக்காக பாஜகவினர் பலவேடம் போடுவார்கள்''-திருமாவளவன் பேட்டி!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

VCK Thirumavalavan interview!

 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாகக் கூறியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழக பாஜக அனுமதிக்காது. இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்திருந்த நிலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

 

இந்நிலையில் பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''வாக்கு வங்கிக்காக தமிழகத்தில் ஒரு வேடம் கர்நாடகாவில் ஒரு வேடம் என பாஜகவினர் பலவேடம் போடுவார்கள். கேல்ரத்னா விருதில் ரஜீவகாந்தி பெயரை நீக்கிய இந்த அநாகரீக அரசியலை கைவிட வேண்டும். பல பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒன்றிய அரசின் பட்டியலில் இணைக்க முதல்வரிடம் வலியுறுத்தினேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்