Skip to main content

“நான் ஒன்றும் ஆளுநர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அல்ல” - வானதி சீனிவாசன் காட்டம்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Vanathi Srinivasan's response to a question about the Pongal invitation from the Governor's House

 

இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அதில் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் அரசு கொடுத்த உரையை முழுவதுமாக படிக்கவில்லை என குற்றம் சாட்டி ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். 

 

இதனை அடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ட்விட்டரில்  #getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

 

இதனையும் தாண்டி சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #getoutravi என்ற ஹேஷ்டேக் உடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நேற்றைய சட்டப்பேரவை கூட்டம் குறித்தும் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்தும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளிவந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பொங்கல் அழைப்பிதழ் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

 

Vanathi Srinivasan's response to a question about the Pongal invitation from the Governor's House

 

அதற்கு பதில் அளித்த அவர், “ஆளுநர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை அவர் எங்கேயும் கட்டாயப்படுத்தவில்லை. சட்டப்பேரவைக்கு வெளியே ஆளுநர் சொன்ன கருத்துகளில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளுங்கள். அதைவிடுத்து போராடும் மனநிலைக்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறுவது மற்றவர்களின் கருத்துகளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்ன என்பதை காட்டுகிறது.

 

ஜனநாயக நாட்டில் உங்களுடைய நிலையைத் தாழ்த்திக் கொண்டு தெருச்சண்டை மாதிரிதான் செய்வோம் என்று சொல்வது உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் என்று தான் பார்க்க முடிகிறது. மாநில அரசு தங்களது விளம்பரங்களில் தலைநிமிர்கிறது தமிழகம் என்று சொல்லவில்லையா? தமிழகம் என்ன சட்டவிரோதமான வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா?

 

பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளார்கள். மக்கள் பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது. எது எல்லாம் பிரச்சனை இல்லையோ அதை பிரச்சனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். பொங்கல் விழாவிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் லட்சினை மற்றும் தமிழக ஆளுநர் என இருந்ததற்கும் பதில் சொல்வதற்கு ஆளுநர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் நான் கிடையாது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.