Skip to main content

"ஒரு விஷயத்தைக் கூறி கட்சியை விட்டுப் போயிருக்கின்றனர்" - வானதி சீனிவாசன் 

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

vanathi srinivasan press meet in coimbatore collector office  

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விவகாரம் ஜனவரி மாதத்தில் இருந்து இருக்கிறது. இது குறித்து இன்று வரை  மாநில அரசும், தமிழக முதல்வரும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது பெரிய பிரச்சினையாக வெளிவந்த பிறகு நடவடிக்கை எடுக்கின்றனர். வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடத்தான் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களை பார்த்து விட்டு அங்கு இருப்பவர்கள் வீட்டிற்கு திரும்பி வர சொன்னதாலும் வடமாநில தொழிலாளர்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.

 

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனையை முதல்வர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த பிரச்சனை தற்போது ஏற்பட்டு இருக்காது. வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவு இருக்கின்றனர். கோவை மாவட்ட பகுதியை மாநில அரசு பாரபட்சமாக நடத்துவதை போன்று தற்போது ஏற்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையையும் பாதிக்கட்டும் என்று தமிழக அரசு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அமைச்சர்களே பானிபூரி விற்பனை குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தான்.

 

ஒரு கட்சியிலிருந்து  வேறு கட்சிக்கு செல்வதும், வேறு கட்சியிலிருந்து பாஜகவிற்கு வருவதும் அரசியலில் வழக்கமான ஒன்றுதான். தற்போது கட்சியை விட்டு விலகிய பா.ஜ.கவை சேர்ந்த சில நிர்வாகிகள் ஒரு விஷயத்தை கூறி விட்டு கட்சியை விட்டு போயிருக்கின்றனர். அவ்வாறு கட்சியை விட்டு வெளியில் செல்லும்போது அவர்களின் கருத்துக்களைத் தான் சொல்வார்கள். இதனால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக புதியவர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.