Advertisment

தி.மு.க.காரன் சொல்ல மாட்டான்... ம.தி.மு.க.காரன் சொல்ல மாட்டான்... வைரமுத்துதான் சொல்ல முடியும்... வைரமுத்து பேச்சு

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழாற்றுப்படை ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது.

Advertisment

vairamuthu

இதில் பேசிய வைரமுத்து,

வைகோ, ஸ்டாலின் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது. வட ஆதிக்கம் இருக்கிறது. வைகோ அவர்களே நீங்கள் உலகமெல்லாம் சுற்றிவிட்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். ஒரு வசை கழிந்தது. என்ன வசை தெரியுமா?. இதனை வேறு யாரும் சொல்ல முடியாது. ஒரு திமுக காரன் சொல்ல மாட்டான். ஒரு மதிமுக காரன் சொல்ல மாட்டான். இருவருக்கும் பொதுவாக இருக்கிற வைரமுத்துதான் சொல்ல முடியும். வரலாற்றில் ஒரு கரை இருந்தது. ஒரு வசை இருந்தது. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடை வந்துவிடுமோ என்றுதான் வைகோ பிரிந்தார் அல்லது பிரிக்கப்பட்டார் என்று வரலாற்று வசை இருந்தது. எந்த வரலாற்று வசையை காலம் அவர்கள் மீது பூசியதோ, அந்த கரையை இன்று மாநிலங்களவை உறுப்பினராக்கி ஸ்டாலின் துடைத்துவிட்டார் என்பதுதான் உண்மை. அந்த வசை இன்று கழிந்தது. கரை கழிந்தது. சகோதர்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். காலமெல்லாம் ஒன்றுபட்டு இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

Advertisment

release books Speech Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe