ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொன்பரப்பி வட்டாரத்தில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். தங்களுடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதால் உரிமை கேட்ட தலித் மக்களுடைய வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன, வன்முறை தாண்டவமாடியது. உரிய நடவடிக்கை கோரி, ஏப்ரல் 24ம் நாள், வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமையிலான எங்கள் தோழமைக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொது உடைமை இயக்கத்தை சேர்ந்த முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் போன்றவர்கள் உரை ஆற்றினர். அங்கே தவறான கருத்துகள் எதுவும் பேசப்படவில்லை.

vaiko-ramadoss

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

எந்த ஒரு சமுதாயத்தின் பெயரையும், முத்தரசன் குறிப்பிடவில்லை. அவர் பேசும்போது, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ராமதாசை மதித்துத்தான் பேசினார். அவரது பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. ஆனால், சிலர் அதைத் தவறாக திரித்து இருக்கிறார்கள். அதனால், பாமக தரப்பில் ஒரு கடுமையான அறிக்கை தந்துள்ளனர். அதைத் துண்டு அறிக்கைகளாகவும் அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற வகையில் அந்த கருத்துகள் இருக்கின்றன. அந்த வரிகளை நான் திரும்பக் கூற விரும்பவில்லை. தயவு செய்து அதை பரப்ப வேண்டாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முத்தரசன் மிக மென்மையானவர், எளிமையானவர், அன்பானவர், எந்தநேரமும் சிரித்த முகத்தோடு இருப்பவர், யாரிடமும் பகைமை கொள்ள மாட்டார். அத்தகையவருக்கு, அலைபேசியில் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வருகின்றன இது தமிழகத்திற்கு நல்லது அல்ல. எனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிலை தொடர விடாமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவினால்தான், ஜனநாயகத்துக்கு நல்லது. நமது வருங்காலத் தலைமுறை, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும். தமிழகத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த பொறுமையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்''. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.