Skip to main content

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிட்லரிசம் இந்திய மண்ணில் ஊடுருவ விட மாட்டோம்: வைகோ பேட்டி

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
vaiko


ஈரோட்டில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "குட்கா வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் தடை ஏதும் இருக்காது என நம்புவதாக கூறினார். 
 

மேலும் அவர், "ஈரோட்டில் ம.தி.மு.க.வின் இரண்டாவது மாநாடு வருகின்ற 15ந் தேதி முப்பெரும் விழா மாநாடாக நடக்க உள்ளது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்க உள்ளார். அதே போல் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சரத் பவார், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, யஷ்வந்த் சின்கா, காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் திருஞாவுக்கரசர், சி.பி.எம், செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ.இரா.முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, நடிகர் சத்தியராஜ், திருமுருகன் காந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சொற்பொழிவாழர்கள் பங்கேற்க உள்ளனர் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். 
 

இந்திய அரசியலில் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மத்திய பாசிச பா.ஜ.க.வின் நிலைபாட்டை மிக கடுமையாக எதிர்கிறோம். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிட்லரிசம் இந்திய மண்ணில் ஊடுருவ விட மாட்டோம் குறிப்பாக திராவிட இயக்கங்கள் அரண் அமைத்து அதை தடுக்கும். அதற்கு ம.தி.மு.க. தி.மு.க.வுடன் இணைந்தே கரம் கோர்த்து செல்லும். 
 

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வருகின்ற 10ந் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்திற்கு ம.தி.மு.க. அதரவு அளித்துள்ளோம். பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பால் அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவர்.
 

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தை மத்திய அரசின் வழி காட்டுதல்படி மாநில அரசு நிறைவேற்றி உள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேர் விடுதலை பிரச்சினையில் ம.தி.மு.க. சார்பில் ராம்ஜெத்மலானி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இனி இருக்காது என நம்புகிறேன். குட்கா விவகாரத்தில் ரெய்டுக்குள்ளான அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.