Skip to main content

பிரபல கொடூர ரவுடி என்கவுண்டர்... பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

Vikas Dubey up

 

சந்தேகத்திற்குரிய விகாஸ் துபே என்கவுண்டர் கொலையின் பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விகாஸ் துபே என்ற உத்திரப்பிரதேசம் சார்ந்த மிகக் கொடூரமான பிரபல ரவுடி, நீதிநெறிமுறைக்கு புறம்பாகச் சந்தேகத்திற்குரிய வகையில் கொல்லப்பட்டதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், பாகுபாடில்லாத நீதிவிசாரணை வாயிலாக, அதன் பின்னணியிலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

யோகி ஆதித்யநாத் எனும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த சாமியார் ஆளும் உத்திரப்பிரதேசத்தில் காட்டு தர்பார் நடப்பதுடன், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதிநெறிமுறை, சட்டபூர்வ விசாரணை ஆகியவைக் காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

 

கொடூர குண்டர் கும்பலின் தலைவன் விகாஸ் துபேவைக் கைது செய்யவந்த காவல்துறையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 8 காவல் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்று ஒரு வாரகாலமாக தலைமறைவான நிலையில், உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபே காவல்துறையிடம் சரணடைந்தார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு சொல்வதாவது, "கடந்த வெள்ளியன்று விகாஸ் துபேவைக் கைது செய்து உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வாகனம் கவிழ்ந்ததாகவும், காயமுற்ற ஒரு காவலரின் துப்பாக்கியைப் பறித்துக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த விகாஸ் முயன்றபோது, தற்காப்புக் கருதி காவல்துறையினர் என்கவுன்டர் செய்து கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.  காவல்துறையிடம் ஏற்கனவே சரணடைந்த ஒரு குற்றவாளி காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து ஏன் தப்பிக்க முயலவேண்டும்? என்ற ஐயம் அனைவரின் மனதிலும் தோன்றுவதும் இயல்பே. இந்த நம்பகத்தன்மை இல்லாத எழுதித் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை பற்றி ஓய்வுபெற்ற ஐ.பி.ஸ். அதிகாரிகளே கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

 

விகாஸ் துபே சரணடைந்த பின் கைது செய்யப்பட்டு, கான்பூர் கொண்டுச் செல்லப்பட்ட காவல்துறைக் குழுவைப் பின்தொடர்ந்து சென்ற ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, "இந்த என்கவுண்டர் என்பது அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே", என்பதாகும். என்கவுண்டர் செய்யப்படுவதற்கு சற்றுமுன்பு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தைத் தொடர்ந்த பிற காவல்துறை வாகனங்கள் பின்தங்கும் வகையில் இடைமறித்து நிறுத்த காவல்துறையால் நிர்பந்திக்கப்பட்டன." என்று ஊடகவியலாளர் தெரிவிக்கின்றனர்.

 

ஊடகவியலாளரின் வாகனங்கள் சோதிக்கப்பட்ட பின் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில் எதிர்பாராதவாறு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் கவிழ்ந்ததாகவும், விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் ஊடகவியலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டர்கள் தலைவனின் ஐந்து கூட்டாளிகள் ஏற்கனவே பல என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அறிந்ததே.

 

பல்வேறு கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய விகாஸ் துபே பிரபல அரசியல்வாதிகளின் முழு ஆதரவோடு கடந்த இருபது ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுன்டர் என்ற சாக்கில் சுட்டுக்கொன்றதால் விகாஸ் துபேவுடன் நீண்டகாலத் தொடர்பிலிருந்த ஊழல் அரசியல்வாதிகளை காவல்துறை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் காப்பாற்றியுள்ளது கண்கூடு.

 

ஜனநாயத்தின் மீதும் மதச்சார்பின்மையின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள அனைவரும், உ.பி. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தயக்கமில்லாமல் எழுச்சிகொண்டு முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp

 

மேலும், விகாஸ் துபே என்கவுண்டர் கொலை தொடர்பாக, இப்போது பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளுடன் மோசமான கொடும் குற்றவாளி  துபே கொண்டிருந்த பாவமிக்க தொடர்புகளை வெளிப்படுத்துவதோடு, நீதிநெறிமுறைக்குப் புறம்பாக நடத்தப்பட்ட போலி என்கவுன்டரின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மைநிலையை வெளிக்கொண்டுவர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். இவ்வாறு முஹம்மது ஷஃபி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.