இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, உதயநிதி சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர் அணியினர் தற்போது இருந்தே உற்சகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த காலத்தில் தான் அதிக பாலங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் அதிகமாக நடைபெற்றது. அதோடு மேயர் பதவி மூலம் மக்களிடையே ஸ்டாலின் அதிக தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். அதே போல் உதயநிதி ஸ்டாலினுக்கும் மேயர் பதவி கொடுப்பதன் மூலம் மக்களோடு அதிக தொடர்பை ஏற்படுத்த வாய்ப்பு உருவாகும் என்று கூறிவருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சென்னை திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. எனவே சென்னையில் போட்டியிடுவது உதயநிதிக்கு எளிதாக வெற்றியை தேடித்தரும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.