Skip to main content

"உதிப்பாரா" உதயநிதி ஸ்டாலின்..?

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திமுகவின் இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 1980ம் ஆண்டு மதுரையில் திமுகவின் இளைஞரணி தொடங்கப்படுகிறது. அதன் முதல் செயலாளராக மு.க ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்கும் வரையில் இளைஞரணியின் செயலாளராக கிட்டதட்ட 35 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்துள்ளார். திமுக தலைவரான பிறகு, அந்த பொறுப்பை முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வசம் ஒப்படைத்தார். சாமிநாதன் கடந்த மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, கடந்த சில மாதங்களாகவே உதயநிதியை சுற்றி பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்படுமா? என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. "எனக்கு எந்த பதவி வேண்டாம், திமுகவில் உறுப்பினராக இருப்பதே பெரிய மகிழ்ச்சி" என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை கூறிவந்த உதயநிதிக்கு, தற்போது திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

 

udhayanithi stalin entry to politics

 
 

திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை போன்று, இளைஞர் அணியின் மூன்றாவது செயலாளராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 80-களின் ஆரம்பத்தில் மு.க ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற போது, அவருக்கு இருந்த அத்தனை சவால்களும் தற்போது உதயநிதிக்கும் உள்ளது. ஏனென்றால் அப்போதும் திமுக எதிர்கட்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது. அப்போது திமுகவிற்கு எம்.ஜி.ஆர் என்ற ஒரு ஆளுமையே எதி்ர்வரிசையில் இருந்தார். தற்போது திரும்பிய பக்கம் எல்லாம் திமுகவை அழிக்க ஆட்கள் முளைத்துவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார் உதயநிதி. இந்த பொறுப்புக்கு உதயநிதி தகுதியானவரா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், அவருக்கு என்ன தகுதியில்லை என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் அவருக்கு நெருக்கமானவரகள். அதற்காக அவர்கள் காரணங்களையும் அடுக்குகிறார்கள். 
 

இதுகுறித்து அவர்கள் பேசும்போது, " கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வர்கள் என்று பார்த்தால் அது இரண்டு பேர்தான். ஒருவர் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி. திமுக பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பட்டித்தொட்டியெல்லாம் உதயநிதி பிரச்சாரம் செய்தார். சொல்லப்போனால் தமிழகத்தில் அவர் காலடிபடாத நாடாளுமன்ற தொகுதியே இல்லை என்ற அளவுக்கு அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரம் எதுவும் வீண் போகவில்லை. அது அனைத்தும் வாக்குகளாக விழுந்துள்ளது. நீங்கள் கலைஞர் போன்று ஸ்டாலினிடமும், ஸ்டாலின் போன்று உதயநிதியிடமும் செயல்பாடுகளை எதிர்பார்த்தால் அது தவறு. அவரவர்களுக்கு என்று என்று ஒரு மாடல் இருக்கிறது. ஸ்டாலினை போன்று உதயநிதியும் கடுமையான உழைப்பாளி தான். அதை கடந்த தேர்தலில் தமிழகமே நேரில் கண்டது. இனி முழுநேரமும் உதயநிதி அரசியல் பணிகளில் ஈடுபடுவார். அவர் இலக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தல்தான். 1971 ஆம் ஆண்டு திமுக பெற்ற வரலாற்று வெற்றியை முறியடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதை அவர் சிறப்பாக செய்து முடிப்பார்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.