publive-image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூர் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் காளியம்மன் கோவில் அருகே நேற்று நடைபெற்றது. இதில்திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையைத்துவக்கி வைத்த பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசியதாவது; “முதல்வர் தளபதியாரின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது.

Advertisment

தமிழக முதல்வருக்கு உறுதுணையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். அவர் விரைவில் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். அவருக்கு அதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. எனவே அவர் தமிழகத்தின் அமைச்சர் பொறுப்பினை விரைவில் ஏற்கவேண்டும். அதுபோல் கலைஞரை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுகவை வழி நடத்துவது போல் எதிர்காலங்களில் உதயநிதி ஸ்டாலின் திமுகவை வழிநடத்த தலைமை ஏற்பார். அதை நாங்கள் கண்டிப்பாக ஏற்போம்” என்று பேசினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வத்தலக்குண்டு ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன், பேரூர் செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.