குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. சென்னையில் திமுக இளைஞரணி சார்பாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த நகலை கிழிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையிலிருந்து பேரணியாக வந்த திமுகவினர் அண்ணாசாலை பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்த நகலை கிழித்தனர். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.