Skip to main content

ரேஷன் கார்டுக்கு ரூபாய் இரண்டாயிரம்! அட்வைஸ் செய்த அதிகாரிகள்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

ddd

 

தீபாவளிக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளது. இப்படிப் பணம் கொடுத்தால் அது தேர்தல் கமிஷனால் குற்றமாகப் பார்க்கப்படுமா என்கிற கேள்வி அரசு வட்டாரங்களில் எழுந்துள்ளது. 

 

அப்படியெல்லாம் இல்லை. கொடுத்தால் ஒன்றும் தவறாகாது. அது தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணமாகாது என ஒரு சில உயரதிகாரிகள் அரசுக்கு அட்வைஸ் செய்துள்ளனர். எனவே வெகுவிரைவில் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க எடப்பாடி அரசு முடிவுசெய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்