Advertisment

வைகோவின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்!

புழல் சிறையில் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

velmurugan

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகெங்கிலும் வாழும் சமூக உணர்வு கொண்டவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வேல்முருகனைக் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தனர்.

Advertisment

அப்போது அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகனைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேசமயம், சமீபத்தில் இறந்த பா.ம.க.வைச் சேர்ந்த காடு வெட்டிகுருவின் இறுதிச்சடங்கிற்கு செல்லவும் வேல்முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், த.வா.க. தலைவர் வேல்முருகன் சிறையிலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

அவர் உண்ணாவிரதம் தொடங்கி நான்காவது நாளான இன்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை வேல்முருகனும் ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டி வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கிதான் வேல்முருகனைக் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் வேல்முருகனைக் கைதுசெய்த காவல்துறையினர் மிகமோசமாக நடந்துள்ளனர்’ என தெரிவித்தார். தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் வேல்முருகனின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

vaiko velmurugan velmurugan tvk
இதையும் படியுங்கள்
Subscribe