Skip to main content

டிடிவி தினகரனின் பிரச்சார ஸ்டைல் !

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்கும் போது இந்த தேர்தலின் பிரச்சாரம் கொஞ்சம் மந்தமாக இருப்பதாக மக்களும் , அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர் .தேர்தல் களத்தில்  கட்சி தலைவர்களின் பேச்சும் , அவர்களது நகைச்சுவைகளும் , அவர்களது அடுக்கு மொழி பேச்சுகளும் மக்களை கவர்ந்து இழுத்து அவர்களை கவனிக்கச் செய்தது . இந்த தேர்தலில் மக்களை ஈர்க்கும் பிரச்சாரங்கள் கொஞ்சம் குறைவாக உள்ளதாகவே இருக்கிறது என்று வாக்காளர்களும்  கட்சி தொண்டர்களும் எண்ணுகின்றனர் . இந்த வகையில் டிடிவி தினகரன் ஒரு புது ஸ்டைலை உருவாக்கி கொண்டிருக்கிறார் . 

 

ttv



அது என்ன என்று பார்த்தால் அவர் எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை தியாகி, ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம், பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பயில்வான் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார்.  இந்த பிரச்சார ஸ்டைல்  தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது . இதில் பிரச்சாரத்துக்கு நடுவே  இந்தப் பட்டப்பெயர்களை வைத்து அழைக்கும் போது கூட்டத்தில் நிற்பவர்கள் சிரித்துவிடுவதாகக் கூறுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். அதுவும் டிடிவி பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஓபிஎஸ்.ஸை மிஸ்டர் தர்மயுத்தம் என்று அழைக்கும்போது மட்டும் கூட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 


 

ttv



அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மந்திரவாதி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை சந்திரமுகி என்றும் அழைக்கிறார் டிடிவி. தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பயில்வான் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியை கிண்டலாக மெகா கூட்டணி என்றும் அதிமுகவை எடப்பாடி அண்ட் கம்பெனி என்றும் அழைத்து வருகிறார். டிடிவி தினகரனுக்கு மத்திய , மாநில  அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையும் விதித்துள்ள விதி முறைகள் இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும்  துணிச்சலாக எல்லோரையும் பட்டப்பெயர் வைத்து பிரச்சாரம் செய்வது கட்சித் தொண்டர்களை உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள் .

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.