கொங்கு மண்டலத்தில்தான் அ.தி.மு.க. மரண அடி வாங்கும்... ஈரோட்டில் டி.டி.வி. தினகரன்.

ttv dinakaran

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவரான எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் 13 மற்றும் 14 ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தாளவாடி மற்றும் சத்தியமங்கலத்தில் பல இடங்களில் திறந்த வேனில் நின்று கொண்டு பேசிய தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் தன் சொந்த மக்களுக்கே கேடு செய்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி அம்மா காலம் வரை கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை தான் ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது காரணம் எடப்பாடி நடத்தும் கம்பெனியால்தான். கொங்கு மண்டல மக்கள் எடப்பாடி, ஓ.பி.எஸ். தலைமையில் இருக்கும், பா.ஜ.க.வின் அடிமையாய் மாறிப்போன அ.தி.மு.க.வுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு பின்பு எடப்பாடியின் ஆட்சி என்ற கம்பெனி தானாக கலையும்" என்றார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

admk ammk elections ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe