Skip to main content

‘ஸ்கெட்ச்’ தினகரன்! ‘டிக்கிலோனா’ அமைச்சர்! ‘சென்டிமென்ட்’ திமுக! -விறுவிறு விருதுநகர்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தலும் வந்துவிடக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியும் பரபரத்துக் கிடக்கிறது. ஏதேதோ பண்ணுகின்றனர்.  விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் தட்பவெப்பம் இது –

 

அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதே நோக்கம்!
-அமமுக அதிரடி!

“பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். வருங்காலப் பிரதமரையே நிர்ணயிக்கும் கட்சிதான் அமமுக.” என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசினார் டிடிவி தினகரன். மதுரையிலோ “இடைதேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்” என்று கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.   ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று அக்கட்சியினரே தினகரனை ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றனர். ஆனாலும், அவர் நினைத்ததைச் சாதித்துக்காட்டுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. 
தினகரன் மனதில் என்னதான் இருக்கிறதாம்?


“தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளில் 50000-லிருந்து 70000 வரை தனக்குச் சாதகமானவை என்றெண்ணும் தினகரன், பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அதிமுகவுக்குத் தோல்வியைத் தரமுடியும் என்று உள்ளுக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதிமுக வாக்குகள் மட்டுமல்ல, திமுக வாக்குகளும் சாதி அடிப்படையில் தினகரன் ஆதரவு நிலை எடுக்கப்போவதை தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரிந்துகொள்ளலாம்.  வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும் ஒரு தொகுதியில்கூட அமமுக வெற்றி பெறாது என்பது அறிவுஜீவியான அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், அரசியல் தொலைநோக்குடன், வெற்றி உறுதி என்று பேசி,  தேர்தல் களத்தைக் கலக்கி வருகிறார். வரும் தேர்தலில்,  தனிப்பெரும் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்தி அதிமுக ஆட்சியைக் கவிழச் செய்வதே அவருடைய இலக்காக இருக்கிறது. அதற்காகவே,   ‘ஸ்கெட்ச்’ போட்டு செயல்படுகிறார்.” என்றார் அமமுகவில் தினகரனின் எண்ண ஓட்டத்தை அறிந்த நிர்வாகி ஒருவர். 
 

 

t

 

தினகரனுக்கு எதிரான திடீர் பாய்ச்சல்!
-டிரென்டிங் அமைச்சரின் டிக்கிலோனா வாய்ஸ்!


தினகரன் விஷயத்தில் பதுங்கியே இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வழக்கத்துக்கு மாறாக இப்போது வேகம் காட்டுகிறார்.  மேடைகளில் தினகரனை விமர்சித்து அவரைப் பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தைப் பிரதிபலித்துவந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, தினகரனின் சமீபத்திய பேச்சு எடப்பாடி மீதான நேரடி தாக்குதலாக இருப்பதால்,  அதற்குப் பதிலடி தரும் விதத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்.

 

r

 

தினகரனால், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக இழக்கும் முக்குலத்தோர் வாக்குகள் குறித்தெல்லாம் மா.செ. ராஜேந்திரபாலாஜி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. நாடார் வாக்குகள், தேவேந்திரகுல வாக்குகள் மற்றும் இதர சமுதாய வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்ற கணக்கோடு இருக்கிறார் அமைச்சர். ரூ.1000 பொங்கல் நிதி, ரூ.2000 சிறப்பு நிதி பெற்ற மக்கள், தேர்தலில் எடப்பாடி பக்கம் நிற்பார்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும், மேடைகளில் அளவுக்கதிகமாக மோடிக்குத் துதிபாடுவது,  அதிரடியாக ’டிக்கிலோனா’ டைப்பில் எதையாவது பேசி ட்ரென்டிங் ஆக்குவது என, தனி ஆவர்த்தனமாகச் செயல்பட்டுவரும் ராஜேந்திரபாலாஜி, நிர்வாகிகளை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதில்லை என்று அக்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு அமைச்சர் வட்டத்திலோ “ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைக் காட்டிலும் மக்களைச் சந்திப்பதையே முக்கியமாக நினைக்கிறார் அமைச்சர். வெற்று அறிக்கைவிடும் அரசியல்வாதியாகவா இருக்கிறார்? தொகுதி முழுவதும் சுற்றிவந்து மக்களைச் சந்திக்கிறார்.

 

பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களிலெல்லாம் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இத்தனை வேகமாகச் செயல்படுபவரைக் குறைகூறுவது அர்த்தமற்றது.” என்கிறார்கள். ஆனாலும், அதிமுக நிர்வாகிகள்  “வாக்குகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எத்தனை முக்கியமானது, பூத் கமிட்டி கூட்டம் அல்லவா அதற்கான வழிவகுக்கும். அதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி?” என்று கேட்கிறார்கள். 

 

தேர்தல் வெற்றிக்காக திமுக நடத்திய ‘சென்டிமென்ட்’ மாநாடு!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மா.செ.க்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.வான தங்கப்பாண்டியன் மீது செம கடுப்பில் இருப்பதாகப் புகார் வாசிக்கிறார்கள்.  கிராமசபை கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது, தங்கப்பாண்டியன் மீது வெளிப்படையாகவே எரிச்சலை உமிழ்ந்தாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. மா.செ.க்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசுவைக் காட்டிலும், எம்.எல்.ஏ. என்ற முறையில் தங்கப்பாண்டியன் ஆக்டிவாகச் செயல்படுவதுதான் உறுத்தலுக்குக் காரணமாம்.

 

 விளம்பர வெளிச்சம் தேடுகிறார் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை வெளிப்படையாகவே  விமர்சிக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று கொளுத்திப் போடுகிறார்கள். நாம் ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடமே கேட்டோம். அவரோ “அரசியலில் நான் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் பாடம் பயின்று வளர்ந்து வருபவன். தவறான தகவலை யாரோ பரப்பியிருக்கிறார்கள். இரண்டு மா.செ.க்களும் என்னை நல்லபடியாக நடத்துகிறார்கள். ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று வேகமாக மறுத்தார்.  

 

v

 

2004 பாராளுமன்ற தேர்தலின்போது விருதுநகரில் தென்மண்டல மாநாட்டை நடத்தியதாம் திமுக. அப்போது 40-க்கு 40 வெற்றி சாத்தியமாயிற்றாம். அதனால், அதே விருதுநகரில் ‘சென்டிமென்ட்’ ஆக கடந்த 6-ஆம் தேதி  மாநாடு நடத்தியது திமுக. அதுவும் அமாவாசை நாளில். இறக்கும் வரையிலும் விடாப்பிடியாக பகுத்தறிவு பேசிவந்த கலைஞர், தன் உயிரைக்காட்டிலும் மேலாக மதித்த திமுகழகம், தற்போது ‘சென்டிமென்ட்’ பாதைக்கு மாறியிருப்பது விந்தைதான்! 


தொண்டர்கள்,  சிங்கிள் டீ குடித்துவிட்டு தெருக்களில் கட்சிக் கொடிகளைத் தோரணம் கட்டியது,  ஊர் ஊராகச் சென்று  கட்சி போஸ்டர் ஒட்டியதெல்லாம் தி.மு.கழகத்தின் கடந்த காலமாகிவிட்டது. தங்களை அம்போவென விட்டுவிட்டு, தலைவர்கள் மட்டுமே முன்னேற்றம் கண்டதால், தொண்டர்களும் காலப்போக்கில் மாறிவிட்டனர்.  அதன் விளைவுதான் – விருதுநகரில் நடந்த  தென் மண்டல திமுக மாநாட்டுக்கு தலைக்கு ரூ.200 கொடுத்து, ஆட்களைக் கூட்டிவர வேண்டிய நிலைக்கு அக்கட்சி ஆளானது. 

 

“கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடாகி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும்,  பிரம்மாண்ட கூட்டம் நடத்தி வேட்பாளர்களை மேடை ஏற்றியிருக்கலாம். இத்தனை செலவழித்து ‘சென்டிமென்ட்’ மாநாடு நடத்தியிருக்க வேண்டியதில்லை.”  என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.   
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.