இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அமமுகவில் பல்வேறு நடவடிக்கைகளை தினகரன் எடுத்து வருவதாக சொல்கின்றனர். இதனையடுத்து அமமுகவின் புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரி மற்றும் ஒருங்கிணைந்த கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பொறுப்பாளராக சி. சண்முகவேலு, துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர் என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகப் பணிகளை விரைந்து செய்வதற்கு ஏதுவாக இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக கோவை கிழக்கு மாவட்டம், கோவை மேற்கு மாவட்டம், கோவை மத்திய மாவட்டம், கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் என ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணகுமார், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சேலஞ்சர் துரை, கோவை மத்திய மாவட்ட செயலாளராக அப்பாதுரை, கோவை வடக்கு மாவட்ட செயலாளராக அலாவுதீன், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக சுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்பாதுரை, அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.