Skip to main content

தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து களமிறங்கப் போகும் டிடிவி தினகரன்? தேனியில் பரபரப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ad

தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 19 தொகுதிகளை தி.மு.க.தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதின் பேரில் மீதி உள்ள 21 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. களமிறங்கி உள்ளது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியை ஆளுங்கட்சியான தி.மு.க. தக்க வைத்துள்ளது. இந்த தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறுசட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் தேனி பாராளுமன்ற தொகுதியாக இருந்து வருகிறது.

இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தும் பெற்றுள்ளது. இத்தொகுதியில் முக்குலத்தோர் சமூத்திற்கு அடுத்தபடியாக பட்டியலின சமூகத்தினர், கவுண்டர், நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் முஸ்லிம், கிறித்துவர்களும் வசித்து வருகிறார்கள். 

இத்தொகுதியை கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கியதின் பேரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஓபிஎஸ் மகனான ஓபிஆர்இடம் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் இத்தொகுதியை கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆளுங்கட்சியான தி.மு.க. இத்தொகுதியில் போட்டிபோட முடிவு செய்ததின் பேரில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வனை வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் தங்க தமிழ்ச்செல்வன்(டிடிஎஸ்) ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியமானார்.

அதைத் தொடர்ந்து தான் கட்சி வளர்ச்சிக்காக தேனி மாவட்டத்தை இரண்டாக பிரித்து வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச்செல்வனையும், தெற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் இராமகிருஷ்ணனையும் முதல்வர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தான் முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்-சை எதிர்த்து அரசியல் செய்து கொண்டு கட்சியையும் வளர்த்துக் கொண்டு தொண்டர்களையும் அரவணைத்து வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அப்படியிருந்தும் தொய்வில்லாமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றிக் கொண்டு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் தொகுதி பொறுப்பு அமைச்சரான ஐ.பெரியசாமியிடமும் நெருக்கமாக இருந்து வந்தவர்தான் இந்த பாராளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்ததின் பேரில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் டிடிஎஸ்-சை வேட்பாளராக அறிவித்தும் இருக்கிறார்கள். அதைக்கண்டு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த உபிகளும் உற்சாகமடைந்து ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து டிடிஎஸ்-ன் வெற்றிக்காக தேர்தல் களத்திலும் குதித்துள்ளனர்.

TTV Dhinakaran to contest against Thangatha Michel Van in Theni constituency

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், உசிலம்பட்டி மகேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், நாராயணசாமி உட்பட சில பொறுப்பாளர்கள் சீட் கேட்டு இருந்தனர். இதில் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளரான நாராயணசாமியை வேட்பாளராக இபிஎஸ் அறிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் களமிறங்கி உள்ள நாராயணசாமி 82 முதல் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை சீட் கேட்டும் இருக்கிறார். அதோடு தொடர்ந்து எம்.பி.சீட்டும் கேட்டு வந்தார். அதன் அடிப்படையில் தான் அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். ஆனால் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமில்லாத வேட்பாளராக இருக்கிறார் என்ற பேச்சும் ர.ர.க்கள் மத்தியில்இருந்து வருகிறது.

ஆனால் இத்தொகுதி அ.திமுக கோட்டையாக இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது தொகுதி மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நன்கு அறிமுகமில்லாதவரை இ.பி.எஸ். அறிவித்துவிட்டார் என்ற பேச்சு இப்பவே ர.ரக்கள் மத்தியில் ஒருபுறம் பேசப்பட்டும் வருகிறது. இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு ர.ர.க்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.

TTV Dhinakaran to contest against Thangatha Michel Van in Theni constituency

இந்த நிலையில், பிஜேபி கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளரான டிடிவி தினகரன் இத்தொகுதியில் மீண்டும் பிஜேபி கூட்டணியுடன் களமிறங்கப் போவதாக ஒரு பேச்சும் பரபரப்பாக இருந்து வருகிறது. அதோடு தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் டி.டி.வி.க்கு வீடு பார்த்தும் வருகிறார்கள். இப்படி டி.டி.வி.தினகரன் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விசயம் தொகுதி மக்களிடமும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு டிடிவி எம்.பி.யாக இருந்தபோது நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை பணத்தை வாரி இறைத்து மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் நல்ல பெயரும் எடுத்து இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி இத்தொகுதியில் போட்டிபோட முடிவு செய்து இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. அதன்மூலம் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே தான் கடும் போட்டியும் நிலவப் போகிறது என்ற பேச்சு தொகுதியில் உள்ள கரைவேஷ்டிகள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.