Skip to main content

திருநாவுக்கரசரின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா திருச்சி?

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

 

காங்கிரசில் இணைந்தபோது ராகுல்காந்தியிடம் தன்னுடைய பயோடேட்டாவை காண்பித்தவுடனே திருநாவுக்கரசர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தான் ராகுல்காந்தி மாநில பொறுப்பு வழங்கினர். 
 

திருநாவுகரசர் தமிழகத்தில் தன் ஜாதி சார்ந்து செயல்பட தொடங்கிவிட்டார். அதன் அடிப்படையில் டிடிவியுடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி காங்கிரசுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். பிஜேபி ஆட்களை காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை வாங்கி கொடுக்கிறார். திமுக ஸ்டாலினுடன் ஏற்பட்ட முரண்பாடு என தொடர்ச்சியாக கட்சிக்குள் உள்ள எதிர்கோஷ்டியின் புகாராலும், இளங்கோவன், ப.சி ஆகியோரின் தொடர் எதிர்ப்பினாலும் தலைவர் பதவியை பறிகொடுத்தார். 

 

Tiruchirappalli Junction


 

ஆனாலும் ராகுல்காந்தி தற்போதைய எம்.பி. தேர்தலில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். திருச்சியில் காங்கிரஸ் வெற்றிபெற்று 23 வருடங்கள் ஆகிவிட்டது. திருச்சியில் உள்ளுர் ஆட்களுக்கு மண்ணின் மைந்தருக்கு கொடுங்கள் என்று லோக்கல் காங்கிரஸ் கட்சியில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். 
 

அதையும் தாண்டி சீட்டு வாங்கியிருக்கிறார். காங்கிரசில் உள்ள எதிர்ப்பாளர்களை சரி செய்து அடுத்தக்கட்ட செயல்பாடுகளே அவருடைய வெற்றியை தீர்மானிக்கும் என்கிறார்கள் திருச்சி கள நிலவரத்தை அறிந்தவர்கள்.
 

திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடுகிறார் என்கிற அறிவிப்பு வெளியானவுடனே திருச்சியில் எம்.ஜி.ஆர். காலத்தில் மா.செ.வாக இருந்த கே.சவுந்திராஜன் சென்னையில் திருநாவுக்கரசரை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார். 

 

thirunavukkarasar congress


 

இதுவரை கடந்து பாதை திருநாவுக்கரசர்! 
 

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சு.திருநாவுக்கரசர்.


1980, 1984 தேர்தல்களிலும் இதே தொகுதியில் வென்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது 1989-ல் இதே தொகுதியில் ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். 
 

அதிமுகவில் இருந்து 1991-ல் விலகியவர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
 

1996-ல் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். 
 

ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக எம்எல்ஏ என்ற அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
 

பின்னர், அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.
 

1998 எம்.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 

1999 எம்.பி. தேர்தலில், புதுக்கோட்டையில் திமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்ற எம்ஜிஆர் அதிமுக சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஜெயித்தவுடன் எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். பாஜக வேட்பாளராக 2009-ல் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பா.ஜ.க.,வில் ம.பி., மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,ஆனார். பதவிக் காலம் முடிந்ததும் உடனே பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.
 

2014 எம்.பி.தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 

கடந்த தேர்தல்களில் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை என 7 சின்னங்களில் மாறிமாறி போட்டியிட்டுள்ளார். தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து திருநாவுக்கரசருக்கு திருச்சி கை சின்னம் கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.