Skip to main content

திருச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சரின் உதவியாளர் கரோனோ தொற்றினால் அனுமதி!!!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
Corona

 

திருச்சியில் டெல்லி சென்று வந்ததாக 121 பேர் கண்டறியப்பட்டு, அவர்களில் 36 பேருக்கு நோய் இருப்பதாக முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 69 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 75 வயது மூதாட்டி, 25 வயது வாலிபர், 35 வயது ஐஸ் வியாபாரி, ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரி நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். சென்னையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை அவசர கூட்டம் நடந்தது. இதில் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அவருடைய உதவியாளரும் சென்றிருந்தார்.

இந்த நிலையில் உதவியாளர் மீண்டும் ஊருக்கு திரும்பும்போது, அவருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கரோனோ தொற்று இருப்பது போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவருடன் தொடர்பில் யார், யார் இருந்தார்கள் என கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அமைச்சரின் உதவியாளர் ஏற்கனவே திருச்சி மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.