Skip to main content

திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரம்... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

ddd

 

திருச்சியைக் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாக வைத்திருக்கும் வியாபாரிகள் போராட்டம், 'காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும்' என்ற ஒற்றைக் கோரிக்கையோடு வலுபெற்று வருகிறது.

 

காந்தி மார்கெட்டானது கரோனாவைக் காரணம் காட்டி மூடப்பட்ட நிலையில், அங்கு வியாபாரம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், தற்காலிகமாக ஜி கார்னா் மைதானம், உள்ளிட்ட ஒரு சில இடங்களை ஒதுக்கி வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

 

ஆனால், வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரமே காந்தி மார்கெட்தான் என்றும் அதனைத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், அரசுத் தரப்பில் காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் இடத்தில், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த உள்ளதால் அந்தத் திட்டத்திற்கு இந்த இடத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் சொல்லப்பட்டுவருகிறது. 

 

இதனிடையே காந்தி மார்கெட் திறப்பது தொடா்பாக, பல்வேறு சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 'மனிதவள சங்கம்' நடத்தி வரும் கிருஷ்ணமூா்த்தி என்பவரது சார்பில், 18.08.2020 அன்று மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் பல்வேறு காரணங்களைக் காட்டி, காந்தி மார்க்கெட்டை மூடிவிட்டு கள்ளிக்குடியில் உள்ள மார்க்கெட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் காந்தி மார்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. 

 

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, வணிகர்கள் சங்கம் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது. அது பலகட்ட விசாரணைக்குப் பிறகு, மீண்டும் நாளை (26.11.2020) விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், 'அறிஞா் அண்ணா மொத்தம் (ம) சில்லரை வணிகா்கள் நலச்சங்கம்' சார்பில் காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 
 

cnc


இந்த மேல்முறையீடு குறித்துப் பேசிய அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு மதுரை உயா்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தற்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை என்றும், பொதுமக்கள், வியாபாரிகள் நலன்கருதி இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், அதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகவும், காந்தி மார்க்கெட்டை திறப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒரு அறிக்கை அளித்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா். எனவே நாளைய தீா்ப்பு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.