Skip to main content

தாயை விட மரங்கள் முக்கியம்... நடிகர் விவேக் பேச்சு...

Published on 20/11/2020 | Edited on 21/11/2020

 

 

திருவண்ணாமலை நகரத்தில் தூய்மை அருணை என்கிற இயக்கம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 40 வார்டுகளில் ஒரு ஆண்டுக்கு இருபத்தைந்து பேர் என்கிற கணக்கில் ஆயிரம் பேர் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதி போன்ற இடங்களில் வாரம் ஒருநாள் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். மாடவீதிகளில் மற்றும் நகர மார்க்கெட் பகுதிகளில் தினசரி தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். மூன்று ஆண்டுகளாக செயல்படும் இந்த அமைப்பு முறைப்படி மட்டுமல்லாமல் நகரத்தையும் நகரத்திலும் ஆயிரக்கணக்கான மரங்களையும் நட்டு பராமரித்து வருகின்றனர். தூய்மையான இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் இரண்டு முறை வருகை தந்து மரங்களை நட்டு வைத்துள்ளார்.

 

இந்நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி நடிகர் விவேக் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தூய்மை அருணை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். 

 

தொடக்க விழாவில் பேசிய நடிகர் விவேக், “இன்று எனது பிறந்த நாள். இந்த பிறந்தநாளை சிறப்பான வகையில் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்து திருவண்ணாமலை தொகுதியின் எம்எல்ஏ முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவை தொடர்பு கொண்டு நான் எனது பிறந்தநாளை நீங்கள் நடத்தும் தூய்மை அருமை இயக்கத்தினருடன் இணைந்து கொண்டாடலாம் என நினைக்கிறேன் என கூறினேன்.

 

அவரும் அதனை ஒப்புக் கொண்டார். அவர் சார்ந்துள்ள இயக்கம் இன்னும் சில மாதங்களில் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்பதை மதித்து என் பிறந்தநாளை பணியாளர்களோடு கொண்டாட ஒப்புக்கொண்டு அதனை ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ளது முழுமையான காற்று. உடலில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதனின் தேவை சுத்தமான காற்று. அந்தக் காற்றை நமக்குத் தருவது மரங்கள்தான். நாம் நமது தாயின் வயிற்றில் பத்துமாதம் தான் இருக்கிறோம். அப்போது நேரடியாக பாதிப்பதில்லை. தாயை விட மரங்களை முக்கியம்” என உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.