Skip to main content

போராட்டத்தால் பனிந்த அரசு..! -பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

ee

 

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில், முன் களப்பணியாளர்களாக ஈடுபட்டு, வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஊழியர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்த ரூபாய் 50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும், அடுத்து தொற்று உறுதியான ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை பெறுகிற வகையில் ரூபாய் 2 லட்சம் கருணை தொகையாக வழங்க வேண்டும். மேலும் இந்த கரோனா பணியில் ஈடுபடும் ஊழிர்களுக்கு உயர்தர மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் நேற்று 5ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

 

eee

 

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்ட தாலுகா அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுக்க  வருவாய்த் துறையில் உள்ள பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  

 

இந்த நிலையில் கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிதி கொடுப்பதாக தமிழக அரசு நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பணிந்ததைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைக் கைவிட்டு மாநிலம் முழுக்க ஊழியர்கள் பணிக்குத் திரும்பினார்கள். 

 

இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் குமரசேன் கூறும்போது, "எங்களது சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாகவே தமிழகத்தில் கரோனா பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றால் மரணமடைந்த 28 அரசு அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூபாய்.25 லட்சம் வழங்குவதாக நேற்றிரவு அறிவிப்பு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சில அலுவலர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இது தொடர்பாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் பெற்றுத்தரப்படும். எனவே எங்களது போராட்டத்தைக் கைவிட்டு இன்று பணிக்குத் திரும்பி உள்ளோம்."என்றார்.

 

அரசு என்ற செவிட்டு காதுகளுக்கு போராட்டம் என்கிற சங்கு ஊதிக் கொண்டே இருக்க வேண்டும் போல.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பதில் சொல்லுங்க சார்...'- தேர்தல் பறக்கும் படையினரிடம் இரவில் வாக்குவாதம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'Answer me sir...'-Argument at night with election flying soldiers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.